பதிவு செய்த நாள்
26 நவ2018
07:09
கச்சா எண்ணெய்:
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, ஏழாவது வாரமாக சரிவில் வியாபாரமாகி வருகிறது. அக்டோபரில், 1 பேரல் விலை, அதிகபட்சமாக, 76 டாலரை எட்டியிருந்தது; தற்போது, பேரலுக்கு, 26 டாலர் குறைந்து, 50 டாலராக சரிந்துள்ளது.
இது, 2014க்கு பின், ஒரு மாதத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும். அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதனால், அடுத்த ஆண்டு, தேவையைக் காட்டிலும், சந்தையில் அதிகப்படியான எண்ணெய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், விலை சரிவடைந்துள்ளது.
ஈரான் மீது பொருளாதார தடை விதித்த போதும், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு, அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதுவும், கச்சா எண்ணெய் விலை சரிவிற்கு ஒரு காரணமாகும். வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பின் கூட்டம், டிச., 6ல் நடைபெற உள்ளது. இதில், கச்சா எண்ணெய் விலை சரிவை தடுக்க, உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா, சில தினங்களுக்கு முன், உலக நாடுகள் ஒருங்கிணைந்து தினசரி எண்ணெய் உற்பத்தியை, 1.4 மில்லியன் பேரல்கள் குறைக்கப் போவதாக கூறியது. ஆசிய சந்தையில், சீனா மற்றும் இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் ஆகும்.
இந்நிலையில், அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, சீனாவின் ஏற்றுமதி பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்ற கண்ணோட்டம் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,510 3,340 3,695 3,800
தங்கம், வெள்ளி
கடந்த வாரம், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை, சரிவில் வர்த்தகம் ஆனது. ஏப்ரலுக்கு பின், பிளாட்டினம் விலை, மிகப் பெரிய சரிவை சந்தித்தது. பொதுவாக தங்கம், ஆபரண தேவையை விட, ஒரு முதலீட்டு பொருளாகவே கருதப்படுகிறது. பணவீக்க உயர்வு, சர்வதேச அசாதாரண சூழல், வட்டி விகித சரிவு போன்ற காலங்களில், தங்கத்தில் முதலீடு அதிகரிப்பது வழக்கம்.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு துவக்கம் முதல், தங்கம் விலை, சரிவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜனவரியில், 1 அவுன்ஸ் தங்கம், 1,357 டாலராக இருந்தது. இது தற்போது, 1,220 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரால், தங்கம் வியாபாரம் பாதிப்புக்குள்ளானது. இந்தாண்டு, மூன்று முறை வட்டியை உயர்த்திய, அமெரிக்க மத்திய வங்கி, 2019ல் மூன்று முறையும், 2020ல் ஒரு முறையும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால், அரசு கருவூல பத்திரங்களின் ஆதாயம் உயரும் என்பதால், முதலீட்டாளர்கள் பிற முதலீட்டைக் குறைத்து, அவற்றில் முதலீடு செய்தனர். அர்ஜென்டினாவில், வரும், 30ல், ‘ஜி – 20 மாநாடு’ துவங்குகிறது. இதில், அமெரிக்கா மற்றும் சீன அதிபர்களின் சந்திப்பு, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே சுமுக நிலை உருவானால், சர்வதேச வியாபாரம் மீண்டும் சீராக நடக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு, இந்தியாவுக்கு என, தங்கக் கவுன்சில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. உலகளவில், தங்கம் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா பெரும் பங்கு வகிப்பதால், தங்கக் கவுன்சில், அன்னியச் செலாவணியை அதிகம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தங்கம்:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,360 30,080 31,180 31,500
வெள்ளி:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 35,870 35,390 36,220 36,615காம்எக்ஸ் (டாலர்) 14.10 13.85 14.40 14.75
செம்பு:
இந்த ஆண்டு துவக்கம் முதலே, சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு, டாலர் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக மோதல் என, இரு காரணங்களை கூறலாம். இரு நாடுகளும், பரஸ்பர இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதனால், தொழிற்சாலை மூலப்பொருட்களான செம்பு, நிக்கல், இரும்பு உள்ளிட்டவற்றின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்நாட்டின் செம்பு நுகர்வு குறைந்ததால், அதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 427.70 422.50 432.50 436.00
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|