அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் இருக்கும்அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் ... ... முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2018
07:09

கச்சா எண்ணெய்:
சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை தொடர்ந்து, ஏழா­வது வார­மாக சரி­வில் வியா­பா­ர­மாகி வரு­கிறது. அக்­டோ­ப­ரில், 1 பேரல் விலை, அதி­க­பட்­ச­மாக, 76 டாலரை எட்­டி­யி­ருந்­தது; தற்­போது, பேர­லுக்கு, 26 டாலர் குறைந்து, 50 டால­ராக சரிந்­துள்­ளது.

இது, 2014க்கு பின், ஒரு மாதத்­தில் ஏற்­பட்ட மிகப் பெரிய சரி­வா­கும். அமெ­ரிக்­கா­வின் எண்­ணெய் உற்­பத்தி அதி­க­ரித்து வரு­கிறது. அத­னால், அடுத்த ஆண்டு, தேவை­யைக் காட்­டி­லும், சந்­தை­யில் அதி­கப்­ப­டி­யான எண்­ணெய் இருக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில், விலை சரி­வ­டைந்­துள்­ளது.

ஈரான் மீது பொரு­ளா­தார தடை விதித்த போதும், அந்­நாட்­டில் இருந்து கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்ய, இந்­தியா உள்­ளிட்ட எட்டு நாடு­க­ளுக்கு, அமெ­ரிக்கா அனு­மதி அளித்­துள்­ளது. இது­வும், கச்சா எண்­ணெய் விலை சரி­விற்கு ஒரு கார­ண­மா­கும். வளை­குடா எண்­ணெய் உற்­பத்தி நாடு­கள் கூட்­ட­மைப்­பின் கூட்­டம், டிச., 6ல் நடை­பெற உள்­ளது. இதில், கச்சா எண்­ணெய் விலை சரிவை தடுக்க, உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சவுதி அரே­பியா, சில தினங்­க­ளுக்கு முன், உலக நாடு­கள் ஒருங்­கி­ணைந்து தின­சரி எண்­ணெய் உற்­பத்­தியை, 1.4 மில்­லி­யன் பேரல்­கள் குறைக்­கப் போவ­தாக கூறி­யது. ஆசிய சந்­தை­யில், சீனா மற்­றும் இந்­தியா அதிக அள­வில் கச்சா எண்­ணெய் மற்­றும் பெட்­ரோ­லி­யப் பொருட்­களை இறக்­கு­மதி செய்­யும் நாடு­கள் ஆகும்.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான வர்த்­த­கப் போர் கார­ண­மாக, சீனா­வின் ஏற்­று­மதி பாதிக்­கும் என்ற அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால், சீனா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி குறை­யும் என்ற கண்­ணோட்­டம் கார­ண­மா­க­வும், கச்சா எண்­ணெய் விலை சரிந்து வரு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,510 3,340 3,695 3,800

தங்கம், வெள்ளி
கடந்த வாரம், சர்­வ­தேச சந்­தை­யில் தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, சரி­வில் வர்த்­த­கம் ஆனது. ஏப்­ர­லுக்கு பின், பிளாட்­டி­னம் விலை, மிகப் பெரிய சரிவை சந்­தித்­தது. பொது­வாக தங்­கம், ஆப­ரண தேவையை விட, ஒரு முத­லீட்டு பொரு­ளா­கவே கரு­தப்­ப­டு­கிறது. பண­வீக்க உயர்வு, சர்­வ­தேச அசா­தா­ரண சூழல், வட்டி விகித சரிவு போன்ற காலங்­களில், தங்­கத்­தில் முத­லீடு அதி­க­ரிப்­பது வழக்­கம்.

கடந்த ஆண்டை ஒப்­பி­டும் போது, இந்­தாண்டு துவக்­கம் முதல், தங்­கம் விலை, சரி­வில் இருந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. ஜன­வ­ரி­யில், 1 அவுன்ஸ் தங்­கம், 1,357 டால­ராக இருந்­தது. இது தற்­போது, 1,220 டாலர் என்ற நிலை­யில் வர்த்­த­க­மாகி வரு­கிறது. சீனா – அமெ­ரிக்கா இடை­யி­லான வர்த்­த­கப் போரால், தங்­கம் வியா­பா­ரம் பாதிப்­புக்­குள்­ளா­னது. இந்­தாண்டு, மூன்று முறை வட்­டியை உயர்த்­திய, அமெ­ரிக்க மத்­திய வங்கி, 2019ல் மூன்று முறை­யும், 2020ல் ஒரு முறை­யும் உயர்த்­தப் போவ­தாக அறி­வித்­துள்­ளது.

இத­னால், அரசு கரு­வூல பத்­தி­ரங்­க­ளின் ஆதா­யம் உய­ரும் என்­ப­தால், முத­லீட்­டா­ளர்­கள் பிற முத­லீட்­டைக் குறைத்து, அவற்­றில் முத­லீடு செய்­த­னர். அர்­ஜென்­டி­னா­வில், வரும், 30ல், ‘ஜி – 20 மாநாடு’ துவங்­கு­கிறது. இதில், அமெ­ரிக்கா மற்­றும் சீன அதி­பர்­க­ளின் சந்­திப்பு, மிக­வும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இரு நாடு­க­ளுக்கு இடையே சுமுக நிலை உரு­வா­னால், சர்­வ­தேச வியா­பா­ரம் மீண்­டும் சீராக நடக்க வாய்ப்­புள்­ளது.

மத்­திய அரசு, இந்­தி­யா­வுக்கு என, தங்­கக் கவுன்­சில் அமைக்­கப் போவ­தாக அறி­வித்­துள்­ளது. உல­க­ள­வில், தங்­கம் இறக்­கு­மதி மற்­றும் நுகர்­வில் இந்­தியா பெரும் பங்கு வகிப்­ப­தால், தங்­கக் கவுன்­சில், அன்­னி­யச் செலா­வ­ணியை அதி­கம் ஈட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,360 30,080 31,180 31,500

வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 35,870 35,390 36,220 36,615காம்எக்ஸ் (டாலர்) 14.10 13.85 14.40 14.75


செம்பு:
இந்த ஆண்டு துவக்­கம் முதலே, சரிவை சந்­தித்து வரு­கிறது. இதற்கு, டாலர் மதிப்பு உயர்வு மற்­றும் அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான வர்த்­தக மோதல் என, இரு கார­ணங்­களை கூற­லாம். இரு நாடு­களும், பரஸ்­பர இறக்­கு­மதி வரியை உயர்த்தி வரு­கின்­றன. இத­னால், தொழிற்­சாலை மூலப்­பொ­ருட்­க­ளான செம்பு, நிக்­கல், இரும்பு உள்­ளிட்­ட­வற்­றின் விலை­யில் தாக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. உலக அள­வில் செம்பு நுகர்­வில், சீனா முத­லி­டம் வகிக்­கிறது. கடந்த சில மாதங்­க­ளாக இந்­நாட்­டின் செம்பு நுகர்வு குறைந்­த­தால், அதன் விலை வீழ்ச்சி கண்­டுள்­ளது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 427.70 422.50 432.50 436.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)