பதிவு செய்த நாள்
26 நவ2018
23:48
இந்திய விவசாயிகளின் வருமானத்தை, குறைந்தபட்சம், 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தும் வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள, ‘மூபார்ம்’ நிறுவனம், இந்தியாவில் உள்ள இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு, பால் குறித்த திறன் பயிற்சி வழங்க இருக்கிறது.
பழைய பொருட்களுக்கான, ‘ஆன்லைன்’ விற்பனை தளமான, ஓ.எல்.எக்ஸ்., நிறுவனம், பயன்படுத்திய கார்களை விற்பதற்காக, 40 நகரங்களில், 150 நிலையங்களை அமைக்க இருக்கிறது.
பாசுமதி அரிசி அல்லாத பிற அரிசிகளை ஏற்றுமதி செய்வதற்கான சலுகைகளை, இந்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது.
நாட்டில், அக்டோபர் மாதத்தில் மட்டும், 8.77 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் ஆப்ரிக்க வணிகப் பிரிவு, அதன் பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ள, ‘ஜே.பி.மார்கன், சிட்டி குரூப், கோல்டுமேன் சாக்ஸ்’ உள்ளிட்ட, உலகளவிலான எட்டு வங்கிகளை நியமித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|