அப்படியா அப்படியா ... முட்டை விலை 390 காசுகளாக நிர்ணய முட்டை விலை 390 காசுகளாக நிர்ணய ...
அன்னிய முதலீடு நவம்பரில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2018
23:50

புதுடில்லி : அன்னிய முதலீட்டாளர்கள், அக்டோபர் மாதத்தில், இந்திய மூலதன சந்தையிலிருந்து, தங்களது பெருவாரியான முதலீட்டை எடுத்த நிலையில், அதற்கு மாறாக, இந்த மாதம் இதுவரை, 6,310 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது.இந்த மாதம் இதுவரை வந்த முதலீடுகள் பெரும்பாலும், கடன் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக, தரவுகள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில், 39 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை, அன்னிய நிறுவனங்கள் திரும்ப எடுத்துக் கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக இது இருந்தது.செப்டம்பர் மாதத்தில், நிதி சந்தைகளில் இருந்து, 21 ஆயிரம்கோடி ரூபாயை, அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுக் கொண்டனர்.

இதுவே, அதற்கு முந்தைய மாதங்களான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், 7,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருந்தனர்.நடப்பு மாதத்தில், 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பங்குச் சந்தையில், 923 கோடி ரூபாயும்; கடன் சந்தையில், 5,387 கோடி ரூபாயும், அன்னிய முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைவும், ரூபாய் மதிப்பு அதிகரிப்பும் மட்டுமின்றி, சீனா – அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகப் போர் குறித்தது. இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அதிக வருமானமும், பாதுகாப்பும் மிக்க முதலீடுகளை உலகளவில் நாடத் துவங்கி உள்ளனர். அதனாலேயே, இந்தியாவில் நடப்பு மாதத்தில், மீண்டும் முதலீடு அதிகரித்து வருகிறது என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)