பதிவு செய்த நாள்
26 நவ2018
23:50
புதுடில்லி : அன்னிய முதலீட்டாளர்கள், அக்டோபர் மாதத்தில், இந்திய மூலதன சந்தையிலிருந்து, தங்களது பெருவாரியான முதலீட்டை எடுத்த நிலையில், அதற்கு மாறாக, இந்த மாதம் இதுவரை, 6,310 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது.இந்த மாதம் இதுவரை வந்த முதலீடுகள் பெரும்பாலும், கடன் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக, தரவுகள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், 39 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை, அன்னிய நிறுவனங்கள் திரும்ப எடுத்துக் கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக இது இருந்தது.செப்டம்பர் மாதத்தில், நிதி சந்தைகளில் இருந்து, 21 ஆயிரம்கோடி ரூபாயை, அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இதுவே, அதற்கு முந்தைய மாதங்களான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், 7,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருந்தனர்.நடப்பு மாதத்தில், 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பங்குச் சந்தையில், 923 கோடி ரூபாயும்; கடன் சந்தையில், 5,387 கோடி ரூபாயும், அன்னிய முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைவும், ரூபாய் மதிப்பு அதிகரிப்பும் மட்டுமின்றி, சீனா – அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகப் போர் குறித்தது. இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அதிக வருமானமும், பாதுகாப்பும் மிக்க முதலீடுகளை உலகளவில் நாடத் துவங்கி உள்ளனர். அதனாலேயே, இந்தியாவில் நடப்பு மாதத்தில், மீண்டும் முதலீடு அதிகரித்து வருகிறது என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|