‘வீவ்ஸ்’ தென் மாநில ஜவுளி கண்காட்சி; ரூ.800 கோடி வர்த்தகம் எதிர்பார்ப்பு ‘வீவ்ஸ்’ தென் மாநில ஜவுளி கண்காட்சி; ரூ.800 கோடி வர்த்தகம் எதிர்பார்ப்பு ...  பி.என்.பி., மோசடியால் ஆபரண ஏற்றுமதி பாதிப்பு; வணிகத்தை சீனா, தாய்லாந்து கைப்பற்றும் ஆபத்து பி.என்.பி., மோசடியால் ஆபரண ஏற்றுமதி பாதிப்பு; வணிகத்தை சீனா, தாய்லாந்து ... ...
ரிலையன்ஸ் இன்ப்ரா.,வில் அனில் அம்பானி மகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2018
07:09

மும்பை : அனில் அம்பானி, தன் இளைய மகன், ஜெய் அன்சுல் அம்பானியை, ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், செயல் இயக்குனராக நியமனம் செய்யப்பட உள்ளார்.

இதை, டிசம்பர் இறுதியில், தன் தந்தை திருபாய் அம்பானியின் பிறந்த நாள் விழாவில், அவர் அறிவிப்பார் எனத் தெரிகிறது.அனில் அம்பானியின் மூத்த மகன், ஜெய் அன்மோல் அம்பானி, 2016ல், ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

ரிலையன்ஸ் இன்ப்ரா., பல்வேறு சொத்துகளை விற்று, கடன்களை திரும்பச் செலுத்தி வருகிறது.கடந்த, 2016ல், 4,800 கோடி ரூபாய்க்கு, சிமென்ட் பிரிவை, பிர்லா குழுமத்திற்கு விற்றது. இந்தாண்டு, ‘அதானி டிரான்ஸ்மிஷன்’ நிறுவனத்திடம், மும்பை மின் வினியோக வர்த்தகத்தை விற்று, 18 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் திரட்டியது.

அடுத்த ஆண்டு, சில நெடுஞ்சாலை திட்டங்களை விற்பனை செய்து, அனைத்து கடன்களையும் அடைக்க திட்டமிட்டுள்ளது.அடுத்த வாரிசிற்கு, கடன் இல்லாத நிறுவனத்தை ஒப்படைக்கும் நோக்கில், அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அவர் சகோதரர், முகேஷ் அம்பானி, ‘ஆர்ஜியோ’ நிறுவன இயக்குனர்களாக, தன் பிள்ளைகள், ஆகாஷ், இஷா ஆகியோரை நியமித்துள்ளார். விரைவில், மூன்றாவது மகன், ஆனந்த் அம்பானியை, ரிலையன்ஸ் குழும நிறுவனமொன்றில்இணைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)