பதிவு செய்த நாள்
27 நவ2018
07:09
மும்பை : அனில் அம்பானி, தன் இளைய மகன், ஜெய் அன்சுல் அம்பானியை, ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், செயல் இயக்குனராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
இதை, டிசம்பர் இறுதியில், தன் தந்தை திருபாய் அம்பானியின் பிறந்த நாள் விழாவில், அவர் அறிவிப்பார் எனத் தெரிகிறது.அனில் அம்பானியின் மூத்த மகன், ஜெய் அன்மோல் அம்பானி, 2016ல், ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ரிலையன்ஸ் இன்ப்ரா., பல்வேறு சொத்துகளை விற்று, கடன்களை திரும்பச் செலுத்தி வருகிறது.கடந்த, 2016ல், 4,800 கோடி ரூபாய்க்கு, சிமென்ட் பிரிவை, பிர்லா குழுமத்திற்கு விற்றது. இந்தாண்டு, ‘அதானி டிரான்ஸ்மிஷன்’ நிறுவனத்திடம், மும்பை மின் வினியோக வர்த்தகத்தை விற்று, 18 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் திரட்டியது.
அடுத்த ஆண்டு, சில நெடுஞ்சாலை திட்டங்களை விற்பனை செய்து, அனைத்து கடன்களையும் அடைக்க திட்டமிட்டுள்ளது.அடுத்த வாரிசிற்கு, கடன் இல்லாத நிறுவனத்தை ஒப்படைக்கும் நோக்கில், அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் சகோதரர், முகேஷ் அம்பானி, ‘ஆர்ஜியோ’ நிறுவன இயக்குனர்களாக, தன் பிள்ளைகள், ஆகாஷ், இஷா ஆகியோரை நியமித்துள்ளார். விரைவில், மூன்றாவது மகன், ஆனந்த் அம்பானியை, ரிலையன்ஸ் குழும நிறுவனமொன்றில்இணைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|