பி.என்.பி., மோசடியால் ஆபரண ஏற்றுமதி பாதிப்பு; வணிகத்தை சீனா, தாய்லாந்து கைப்பற்றும் ஆபத்து பி.என்.பி., மோசடியால் ஆபரண ஏற்றுமதி பாதிப்பு; வணிகத்தை சீனா, தாய்லாந்து ... ... பழசுக்கு புதுசு: அப்பலோ டயர்ஸின் 'எக்ஸேஞ்ச் ஆபர்' பழசுக்கு புதுசு: அப்பலோ டயர்ஸின் 'எக்ஸேஞ்ச் ஆபர்' ...
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 42,000 கோடி; மறு பங்கு மூலதன திட்டத்தில் மத்திய அரசு உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2018
07:14

புதுடில்லி : மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், 42 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க உள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் நிதியாதாரத்தை மேம்படுத்த, 2017, அக்., மறு பங்கு மூலதன திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.அப்போது, இத்திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளுக்கு, இரண்டு நிதியாண்டுகளில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும்.

இத்தொகையில், மத்திய அரசு, மறு பங்கு மூலதன கடன் பத்திர வெளியீடுகள் மூலம், பொதுத் துறை வங்கிகளுக்கு, 1.35 லட்சம் கோடி ரூபாய் அளிக்கும். எஞ்சியதொகையை, வங்கிகள், நிதிச் சந்தையிலும், பங்கு வெளியீடுகள் வாயிலாகவும் திரட்டிக் கொள்ளும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, மத்திய அரசு கடந்த ஓராண்டில், மறு பங்கு மூலதன கடன் பத்திரங்கள் மூலம், பொதுத் துறை வங்கிகளுக்கு, 82 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையை, அடுத்த நான்கு மாதங்களில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா :
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, 2019, மார்ச்சுக்குள், பொதுத் துறை வங்கிகளுக்கு, மறுபங்கு மூலதன திட்டத்தின் கீழ், 42 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது. அதில், முதல் தவணை, அடுத்த மாதம் மத்தியில் வழங்கப்படும்.பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற சில பெரிய வங்கிகளுக்கு, பங்கு மூலதன உதவி தேவைப்படாது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, இந்தாண்டு, இரு தவணைகளில் பங்கு மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால், இதர வங்கிகளுக்கு மட்டும் நிதியுதவி கிடைக்கும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தள்ளி வைப்பு :
கடந்த வாரம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில், ‘பேசல் – 3’ விதிமுறைகளின் அமலாக்கம், 2020, மார்ச் வரை, ஓராண்டுக்கு தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனால், வங்கிகள் பராமரிக்க வேண்டிய மூலதன இருப்பு விகிதம், 9 சதவீதமாகவே நீடிக்கும். அதேசமயம், கடைசி தவணையான, 0.625 சதவீத, மூலதன பாதுகாப்பு விகிதத்தை, வங்கிகள், 2020, மார்ச்சுக்குள் பராமரிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

இது, பொதுத் துறை வங்கிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. திவால் சட்டம் காரணமாக, வங்கிகளின் வாராக்கடன் வசூல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மூலதன இருப்பு விகித கட்டுப்பாடும் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகளின் சொத்து மதிப்பு கணிசமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடன் தகுதி குறையும் :
ரிசர்வ் வங்கி, பொதுத் துறை வங்கிகள் பின்பற்ற வேண்டிய, பேசல் – 3 விதிமுறையை ஓராண்டு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. இது, பொதுத் துறை வங்கிகளின் கடன் தகுதி மதிப்பீடு குறைய வழி வகுக்கும்.
–ஸ்ரீகாந்த் வத்லாமணி,துணை தலைவர், நிதி நிறுவனங்கள் பிரிவு, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)