பதிவு செய்த நாள்
28 நவ2018
06:20
புதுடில்லி : ‘‘ஏற்றுமதியாளர்களுக்கு தாராளமாக கடன் கிடைக்க ஆவன செய்யுமாறு, நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஆனால், ஏற்றுமதியாளர்களுக்கு கடன் கிடைப்பது குறைந்துஉள்ளது. இது குறித்து, மத்திய நிதியமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராளமாக கடன் கிடைத்தால், ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும்.
இந்தாண்டு மார்ச், 30 நிலவரப்படி, ஏற்றுமதி கடன், 28 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக இருந்தது. இது, ஜூன், 22ல், 22 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.ஏற்றுமதியாளர்கள், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மத்திய கிழக்கு நாடுகள் உட்பட, புதிய சந்தைகளில், ஏற்றுமதி வாய்ப்பை கண்டறிய வேண்டும்.
கடந்த, 2011 -– 12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 30 ஆயிரம் கோடி டாலராக இருந்தது. இது, 2017 -– 18ம் நிதியாண்டில், 30 ஆயிரத்து, 300 கோடி டாலராக உயர்ந்துள்ளது.ஏற்றுமதி அதிகரித்தால், தயாரிப்பு, வேலைவாய்ப்பு உயரும் என்பதுடன், அன்னியச் செலாவணியும் கிட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|