‘மாருதி சுசூகி சுவிப்ட்’ விற்பனை 20 லட்சத்தை தாண்டியது ‘மாருதி சுசூகி சுவிப்ட்’ விற்பனை 20 லட்சத்தை தாண்டியது ... பார்லி.,யில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கிறார் உர்ஜித் பார்லி.,யில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கிறார் உர்ஜித் ...
அறைக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசக்கூடாது; ரிசர்வ் வங்கிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா, ‘குட்டு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2018
06:27

புதுடில்லி : ‘‘நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும்,’’ என, துணை ஜனாதிபதி, வெங்கையா வலியுறுத்திஉள்ளார்.

கறுப்பு ஆடுகள் :
அவர், டில்லியில், இந்திய ஜவுளி துறை கூட்டமைப்பின் வைர விழா நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது:தற்போதைய நிதிப் புழக்கப் பிரச்னைக்கு, வங்கிகளை சுயலாபத்திற்காக பயன்படுத்திய சில கறுப்பு ஆடுகள் தான் காரணம். இது, ஒட்டுமொத்த தொழில் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.அரசியல்வாதிகள், தொழில் துறையினர் உட்பட, நாம் அனைவரும் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

வங்கிகள், தாராளமாக கடன் வழங்கிய போது, ரிசர்வ் வங்கி ஏதும் செய்யாமல், தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அடுத்தடுத்து பிரச்னைகள் உருவாகிஉள்ளன.அவற்றை ஆய்வு செய்து, தீர்வு காண, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும். இதில், யாருக்கு வலிமை உள்ளது அல்லது இறுதி முடிவெடுக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற கேள்வி எல்லாம் தேவையில்லை.

சீர்திருத்தம் :
மக்கள் தான் முடிவானவர்கள். அவர்கள் நலன் தான் முக்கியம். மக்களின் நல்வாழ்வுக்காகத் தான் அனைத்து திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.அதனால், முதலில் ஊடகங்களில் விவாதம் நடத்தி விட்டு, பின், தீர்வுக்கான பேச்சில் ஈடுபடுவதை விட, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், உள்மட்ட அளவில் பேச்சு நடத்தி, பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

உலகளவில், முதலீட்டிற்கு உகந்த நாடாக, இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள் தொடர்ந்தால், உலகில், மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என, உலக வங்கி, உலக பொருளாதார கூட்டமைப்பு ஆகியவை தெரிவித்துள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

அவர் பேச்சு, மத்திய அரசை வெளிப்படையாக விமர்சனம் செய்த, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யாவை கண்டிக்கும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜவுளி துறை, 3 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது. அடுத்து உருவாகி வரும், நான்காவது தொழில் புரட்சிக்கு தேவையான, புதுமையான தொழில்நுட்பங்களை, ஜவுளி துறை பின்பற்ற வேண்டும்.
–வெங்கையா, துணை ஜனாதிபதி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)