ஏ.டி.எம்.,கள் மூடப்படாது ஏ.டி.எம்.,கள் மூடப்படாது ...  செயல்படாத நிறுவனங்கள், 7 லட்சமாக உயர்வு : புள்ளிவிபரம் வெளியிட்டது மத்திய அரசு செயல்படாத நிறுவனங்கள், 7 லட்சமாக உயர்வு : புள்ளிவிபரம் வெளியிட்டது மத்திய ... ...
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 நாடுகள் பங்குதாரர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2018
00:28

‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஐந்து நாடுகள் பங்குதாரர்கள் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24 ஆகிய தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.மாநாட்டில், பங்குதாரர் நாடுகளாக ஐந்து நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. மாநாட்டின் பங்குதாரர் நாடுகளாக, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் லண்டன் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளன.மாநாட்டின் பங்குதாரர்நாடுகளாக விருப்பம் கோரி, தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு துாதரகத்துக்கு, தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்படும்.இந்த கடிதத்தை ஏற்று, விருப்பம் தெரிவிக்கும் நாடுகள் பங்குதாரர் நாடுகளாக தேர்வு செய்யப்படும். இதன் படி ஐந்து நாடுகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்நாடுகளில் இருந்து அதிகமான பிரதிநிதிகள், மாநாட்டில் பங்கு பெற, தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்வர். மேலும், இங்குள்ள தொழில் நிறுவனங்களுடன், அந்நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், மாநாடு தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு இந்நாடுகள் உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)