பதிவு செய்த நாள்
29 நவ2018
00:28
‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஐந்து நாடுகள் பங்குதாரர்கள் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24 ஆகிய தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.மாநாட்டில், பங்குதாரர் நாடுகளாக ஐந்து நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. மாநாட்டின் பங்குதாரர் நாடுகளாக, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் லண்டன் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளன.மாநாட்டின் பங்குதாரர்நாடுகளாக விருப்பம் கோரி, தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு துாதரகத்துக்கு, தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்படும்.இந்த கடிதத்தை ஏற்று, விருப்பம் தெரிவிக்கும் நாடுகள் பங்குதாரர் நாடுகளாக தேர்வு செய்யப்படும். இதன் படி ஐந்து நாடுகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்நாடுகளில் இருந்து அதிகமான பிரதிநிதிகள், மாநாட்டில் பங்கு பெற, தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்வர். மேலும், இங்குள்ள தொழில் நிறுவனங்களுடன், அந்நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், மாநாடு தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு இந்நாடுகள் உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|