பதிவு செய்த நாள்
29 நவ2018
00:28
புதுடில்லி: நாட்டில், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், ௬.௯௪ லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளதாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பலர், போலி நிறுவனங்களை துவக்கி, சட்ட விரோத பணப் பரிமாற்றம், வரி ஏய்ப்பு போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய நிறுவனங்களை கண்டுபிடித்து, களையெடுக்கும் பணியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.இதன் காரணமாக, மத்திய நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த நிறுவனங்களில், ஐந்தில், இரண்டு நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.மஹாராஷ்டிராஇது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தாண்டு, அக்., 31 நிலவரப்படி, இந்தியாவில் பதிவு செய்த நிறுவனங்கள் எண்ணிக்கை, 18.10 லட்சமாக உள்ளது. அதில், 11.16 லட்சம் நிறுவனங்கள் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன; 6.94 லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செயல்படும் நிறுவனங்களில், 11.09 லட்சம் நிறுவனங்கள், பங்கு மூலதன நடைமுறையை பின்பற்றுகின்றன. வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் பிரிவில், 6,668 நிறுவனங்கள் உள்ளன. தனி நபர்களால், 341 நிறுவனங்கள் வழி நடத்தப்படுகின்றன.நாட்டில், செயல்பாட்டில் உள்ள, பதிவு செய்த நிறுவனங்களில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 2.25 லட்சம் நிறுவனங்கள், மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அடுத்த இடங்களில், டில்லி, மேற்கு வங்கம் ஆகியவை, முறையே, 1.97 லட்சம் மற்றும் 1.27 லட்சம் பதிவு பெற்ற நிறுவனங்களுடன் உள்ளன.கடந்த அக்டோபரில், புதிதாக, 11 ஆயிரத்து, 625 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரத்துஅவற்றில், 1,156 நிறுவனங்கள், பொதுத் துறையைச் சேர்ந்தவை; எஞ்சியவை, தனியார் நிறுவனங்கள்.ஒரு நிறுவனம், பதிவு செய்த ஓராண்டிற்குள் செயல்படத் தவறினால் அல்லது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வர்த்தகம் புரியாமல் இருந்தால், அந்நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.இந்த வகையில், கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த, 2.26 லட்சம் நிறுவனங்கள், பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைமத்திய அரசு, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கவும், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த, 2015ல், கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைக்கு, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அத்துடன், வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் மற்றும் சொத்துகளை மீட்க, தனி சட்டம் இயற்றப்பட்டது. கடந்த, 2016ல், வருமான அறிவிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. பினாமி சொத்துகளை பறிமுதல் செய்ய, பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அனைத்திற்கும் மேலாக, 2016, நவ., 8ல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|