செயல்படாத நிறுவனங்கள், 7 லட்சமாக உயர்வு : புள்ளிவிபரம் வெளியிட்டது மத்திய அரசு செயல்படாத நிறுவனங்கள், 7 லட்சமாக உயர்வு : புள்ளிவிபரம் வெளியிட்டது மத்திய ... ...  போன் அழைப்பு பிரச்னை கண்டுகொள்ளாத, ‘டிராய்’ போன் அழைப்பு பிரச்னை கண்டுகொள்ளாத, ‘டிராய்’ ...
காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2018
00:30

புதுடில்லி: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம்.இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது, டில்லி – ஹரியானா எல்லையில் உள்ள, குருகிராம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய இடங்களில், இந்த நவீன, ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட்டுள்ளன.விரைவில், நாட்டின் முக்கிய நகரங்களில், இவ்வகை இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள, ‘லைவ் டெல்லர்’ பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம்., இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவர் அனுமதி அளித்ததும், ஏ.டி.எம்., சாதனத்தில், காசோலையை செலுத்த வேண்டும்.அத்துடன், ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே, ‘ஸ்கேன்’ செய்து, அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம்., மானிட்டர் திரை மீது, வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து, ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது.இந்த முறையில், உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு, உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில், ‘டெபிட்’ கார்டு இல்லாமல், ‘ஆதார்’ எண்ணை தெரிவித்து, ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.அத்துடன், பணம் டெபாசிட் செய்வதற்கும், தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும், இந்த புதிய, ஏ.டி.எம்., பயன்படும்.தற்போது, இரண்டு வங்கிகள், இந்த புதிய, ஏ.டி.எம்.,மை பயன்படுத்த துவங்கியுள்ளன. விரைவில், மேலும் பல வங்கிகள் இச்சேவையை நாடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)