பதிவு செய்த நாள்
29 நவ2018
00:31
புதுடில்லி: ‘ஏர்டெல், வோடபோன் ஐடியா’ நிறுவனங்கள், பல ஆண்டுகளாக, வரும் அழைப்புகளை இலவசமாக வழங்கி வந்த நிலையில், தற்போது, அச்சேவையை ரத்து செய்துள்ளன.மேலும், மாதந்தோறும்குறைந்தபட்சம், 35 ரூபாய்க்கு, ‘ரீ – சார்ஜ்’ செய்தால் தான், பேசவும், அழைப்பை பெறவும் முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன.இதனால், சந்தாதாரர்களுக்கு, தங்கள் கணக்கில் பணம் இருந்தும், மாதந்தோறும் ரீ – சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, டிராய், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘சேவை காலம் காலாவதியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன், அது குறித்து, சந்தாதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ‘அதுவரை, ப்ரீபெய்டு கணக்கில், குறைந்தபட்ச ரீ – சார்ஜ் செய்வதற்கான தொகை இருந்தால், சேவையை நிறுத்தக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2005க்கு பின், வாழ்நாள் முழுவதும், வரும் அழைப்புகள் இலவசம் எனக் கூறி சந்தாதாரர்களை, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்த்தன.தற்போது, ‘ஆர்ஜியோ’ போட்டியால், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள், ஓசையின்றி அச்சேவையை நிறுத்தியுள்ளன. இந்த விதிமீறல் குறித்து டிராய், அந்நிறுவனங்களை கண்டிக்காதது ஏன் என, பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|