பதிவு செய்த நாள்
29 நவ2018
23:32
நியூயார்க் : அமெரிக்காவில், பணியாளர்களிடம், இனம், நாடு அடிப்படையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக, டி.சி.எஸ்., நிறுவனத்தின் மீது, அதன் முன்னாள் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டி.சி.எஸ்., நிறுவனம், இனம் மற்றும் நாடு அடிப்படையில் தங்களை பணி நீக்கம் செய்ததாக, முன்னாள் ஊழியர்கள் கிறிஸ்டபர் ஸ்லைட், சயீத் அமிர் மசூதி, நோபல் மன்டிலி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், தெற்காசியா அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களிடம், இனம், நாடு அடிப்படையில், டி.சி.எஸ்., பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார்.
இது குறித்து, டி.சி.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறியதாவது: நிறுவனம், எப்போதும் திறமைக்குத் தான் முதலிடம் அளித்து வருகிறது. முன்னாள் ஊழியர்கள், நிறுவனம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக, துவக்கம் முதல் தெரிவித்து வந்தோம். அதை, நிரூபிக்கும் வகையில் தீர்ப்பாகியுள்ளது.
நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தின் வெற்றிக்கு, திறமையான உள்நாட்டவர்கள் இன்றியமையாத பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதனால், அமெரிக்க வர்த்தகத்தில், தொடர்ந்து முதலீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|