பதிவு செய்த நாள்
29 நவ2018
23:34
புதுடில்லி : டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாபே, ஜப்பானின், ‘இசகி அண்டு கோ’ நிறுவனத்துடன் இணைந்து, காம்பாக்ட் ரக டிராக்டர்களை தயாரிக்க உள்ளது.
இசகி நிறுவனம், நடவு, அறுவடை உள்ளிட்ட விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்களை தயாரிப்பதில், ஜப்பானில் முன்னணியில் உள்ள மூன்றாவது பெரிய நிறுவனமாகும்.
இது குறித்து, டாபே நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான, மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதாவது: காம்பாக்ட் டிராக்டர் பிரிவில், இந்தியாவில் வலுவான இடத்தில் டாபே உள்ளது. தற்போது, இசகி நிறுவனத்துடன் இணைந்து, உலகளவிலான அனுபவத்தை டாபே பெற உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளரும் உலகளவிலான தயாரிப்பை பெற்று, உருவாகி வரும் புதிய தேவைகளை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இசகி நிறுவனம், இந்திய சந்தைகளுக்கான டிராக்டர்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, டாபே நிறுவனத்துக்கு வழங்கும். டாபே நிறுவனம், மதுரையில் உள்ள அதன் ஆலையில் இந்த டிராக்டர்களை தயாரிக்கும். 2020ம் ஆண்டுவாக்கில், இந்த டிராக்டர்கள் சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|