பதிவு செய்த நாள்
29 நவ2018
23:37
புதுடில்லி : ‘இன்வென்ஷியா, மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர், ஸெல்ப்மாக் டிசைன்’ ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, இந்த அனுமதியை வழங்கி உள்ளது.இந்த மூன்று நிறுவனங்களும், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்திருந்தன.இந்த மூன்று நிறுவனங்களோடு சேர்த்து, நடப்பாண்டில் இதுவரை, 73 நிறுவனங்களுக்கு புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, செபி வழங்கி உள்ளது.
இன்வென்ஷியா ஹெல்த்கேர் நிறுவனம், 125 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட உள்ளது.மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின், 31.64 லட்சம் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க உள்ளது. மொத்தத்தில், 450 கோடி ரூபாயை, பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஸெல்ப்மாக் டிசைன் நிறுவனம், 23 கோடி ரூபாய் நிதியை, பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது.திரட்டப்படும் தொகையை கொண்டு, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள மேம்பாட்டு நிலையங்களுக்கு தேவையான, கம்ப்யூட்டர் சார்ந்த வன்பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
மெட்ரோபோலிஸ் நிறுவனம், 1 கோடியே, 52 லட்சத்து, 69 ஆயிரத்து, 684 பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.இதில், பங்குதாரர்களின் பங்குகளும் அடக்கம். திரட்டப்படும் தொகையில் ஒரு பகுதியை, பிராண்டை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|