பதிவு செய்த நாள்
02 டிச2018
01:47
புதுடில்லி:கடந்த, நவம்பரில், யு.பி.ஐ., மூலம் மேற்கொள்ளப்பட்ட, மின்னணு பணப் பரிவர்த்தனைகள், முதன் முறையாக, 50 கோடியை கடந்துள்ளன.
மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான பாலமாக, யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா வசதி விளங்குகிறது.என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப் பட்டுவாடா கழகம், இந்தியாவில், மின்னணு தொழில்நுட்பத்திலான சில்லரை பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது.
இக்கழகத்தின், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான, யு.பி.ஐ., செயலி, மொபைல் போன் மூலம், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும், பெறவும், பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்தவும் உதவுகிறது.கடந்த, 2016, நவ., 8ல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து, என்.பி.சி.ஐ., வெளியிட்டு உள்ள அறிக்கை:கடந்த நவம்பரில், முதன் முறையாக, யு.பி.ஐ., வாயிலான பணப் பரிவர்த்தனை, 50 கோடியை தாண்டியுள்ளது. அம்மாதத்தில், 82,232 கோடி ரூபாய் மதிப்பிலான, 52.49 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.இது, அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட, 74,978 கோடி ரூபாய் மதிப்பிலான, 48.23 கோடி பரி வர்த் தனைகளை விட, 9 சதவீதம் அதிகம்.முதன் முறையாக, ரொக்கமில்லா பரிவர்த்தனையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது, பெருமை அளிக்கிறது.
கடந்த, செப்டம்பரில், யு.பி.ஐ., பரிவர்த்தனை, முதன் முறையாக, 40 கோடியை தாண்டியது. ஒட்டுமொத்த, யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில், மத்திய அரசின், ‘பீம்’ ஆப்பின் பங்களிப்பும், மாதந்தோறும் உயர்ந்து வருகிறது.நவம்பர் மாதத்தில், பீம் ஆப் மூலம், 7,981 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.73 கோடி பரிவர்த்தனைகள், யு.பி.ஐ., மூலம் நடைபெற்றுள்ளன.
கடந்த ஓராண்டில், யு.பி.ஐ., மாதாந்திர பரிவர்த்தனைகள், 2,000 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.நாட்டில், மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் சிறப்பான வளர்ச்சிக்கு இது எடுத்துக் காட்டாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்
என்.பி.சி.ஐ., இந்தாண்டு, ஆக., 16ல், மேம்பட்ட, யு.பி.ஐ., 2.0 செயலியை வெளியிட்டது. இதில், வங்கி வாடிக்கையாளர்கள், ‘ஓவர் டிராப்ட்’ கணக்கை இணைக்கும் வசதி உட்பட, பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள், முன்னதாக பணப் பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளித்து, தொகையை பின்னாளில் செலுத்தும் வசதியும் உள்ளது.வாடிக்கையாளர்கள், பணம் செலுத்தும் முன், வர்த்தகர்கள் அனுப்பும் விலைப்பட்டியலை சரிபார்க்க உதவும், ‘இன்வாய்ஸ் – இன் – தி – பாக்ஸ்’ பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போனில், வணிக நிறுவனங்களின், ‘க்யூஆர்’ கோடை ஸ்கேன் செய்து, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட புதிய வசதிகளும் இணைக்கப் பட்டுள்ளன.
எப்படி பண பரிவர்த்தனை மேற்கொள்வது?
* ஒவ்வொரு வங்கியும், அவற்றுக்கென, யு.பி.ஐ., ஆப்பை வெளியிட்டு உள்ளன
* இணைய வசதியுள்ள ஸ்மார்ட் போனில், யு.பி.ஐ., ஆப்பை பதிவிறக்கவும்
* அதில், வங்கி கணக்கு விபரங்களை அளிக்கவும்
* விர்ச்சுவல் ஐ.டி., எனப்படும், மெய்நிகர் அடையாள எண் உருவாக்கவும். இதற்கு, மொபைல் போன் எண்ணை பயன்படுத்தலாம்.
* எம்.பி.ஐ.என்., எனப்படும் ரகசிய குறியீட்டை உருவாக்கிக் கொள்ளவும்.
* 5 – - 7 நிமிடங்களில் பணப் பரிவர்த்தனைக்கு தயாராகலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|