யு.பி.ஐ., பட்டுவாடா அபார வளர்ச்சியில் மின்னணு பண பரிவர்த்தனை துறை யு.பி.ஐ., பட்டுவாடா அபார வளர்ச்சியில் மின்னணு பண பரிவர்த்தனை துறை ... கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மவுசு! கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மவுசு! ...
நவம்பரில் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ. 97,637 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
02:15

புதுடில்லி:கடந்த நவம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 97,637 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, அக்டோபரில், 1,00,710 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு ஏப்ரலில், முதன் முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. அதன் பின், சரிந்து, அக்டோபரில், மீண்டும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

நவம்பர் இறுதி நிலவரப்படி, அக்டோபர் மாதத்திற்கான, ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ படிவத்தில் விற்பனை கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, 69.6 லட்சமாக அதிகரித்துள்ளது. நவம்பரில் திரட்டப்பட்ட, ஜி.எஸ்.டி., வருவாயில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 16,812 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 23,070 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மாநிலங்கள் இடையிலான விற்பனைக்கு,மத்திய அரசு வசூலிக்கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 49,726 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.இதில், இறக்குமதி மூலம் கிடைத்த, 24,133 கோடி ரூபாய் மற்றும் கூடுதல் வரி வாயிலாக வசூலித்த, 8,031 கோடி ரூபாய் அடங்கும்.

நவம்பரில், வரி வருவாய் பகிர்வுக்கு பின், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முறையே, 35,073 கோடி ரூபாய் மற்றும் 38,774 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.‘‘நவம்பரில், ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தபோதிலும், நடப்பாண்டின் மாதாந்திர சராசரி வருவாய் அதிகரித்து உள்ளது. ‘‘அதனால், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் நிர்ணயித்துள்ள, மாதந்திர, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கு, வரும் மாதங்களில் எட்டப்படும்,’’ என, ‘யர்னஸ்ட் யங்’ நிறுவனத்தின் வரித் துறை பங்குதாரர், அபிஷேக் ஜெயின் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் தான்

இந்தாண்டு, ஜி.எஸ்.டி., மூலம், ஜனவரி, 86,318 கோடி ரூபாய்; பிப்ரவரி, 85,000 கோடி ரூபாய்; மார்ச், 89,264 கோடி ரூபாய்; ஏப்ரல், 1,03,458 கோடி ரூபாய்; மே, 94,016 கோடி ரூபாய்; ஜூன், 95,610 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.ஜூலையில், 96,483 கோடி ரூபாய்; ஆகஸ்டில், 93,690 கோடி ரூபாய்; செப்டம்பரில், 94,442 கோடி ரூபாய்; அக்டோபரில், 1,00,710 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)