பதிவு செய்த நாள்
02 டிச2018
23:53
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், 1,700 புள்ளிகள் சரிந்து, 10 ஆயிரம் புள்ளிகள் வரை எட்டியிருந்தது. கடந்த நவம்பர் மாதத்தில், சந்தையில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டு, 700 புள்ளிகள் வரை உயர்ந்து, 10,816 புள்ளிகளி-ல் வியாபாரம் முடிவுற்றது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து மூன்றாவது வாரமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், இன்போசிஸ்’ மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி போன்ற பங்குகள், சந்தை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. தொழில்நுட்பத் துறை குறியீட்டு எண், 5 சதவீதம் உயர்ந்தும், மெட்டல் துறை குறியீட்டு எண், 1.6 சதவீதம் சரிந்தும் வர்த்தகம் ஆனது.இந்தியாவின் மொத்த, ஜி.டி.பி., 7.1 சதவீதமாக ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் இருந்தது. இது, முந்தைய ஆண்டை விட குறைவாகும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்றவற்றால், இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, தொழில் துறை மற்றும் தொழிற்சாலை வளர்ச்சி துறைகளில், வளர்ச்சி விகிதம் பாதிப்பிற்குள்ளாகியது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை, எதிர்பார்த்ததை விட அதிகமாக, அக்டோபர் மாதத்தில் இருந்தது. மேலும், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் மாதத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை, அரசு கருவூலங்களின் சந்தையில் கொள்முதல் செய்வதாக அறிவித்தது. இது, சந்தைக்கு சாதகமானதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இன்று, நவம்பர் மாதத்திற்கான, இந்திய தொழில் துறை வளர்ச்சி குறியீடான, பி.எம்.ஐ., விபரம் வெளிவர உள்ளது. மேலும், வரும் புதன் கிழமை அன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது.
ரெப்போ வட்டி விகிதம், 6.5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், 6.25 சதவீதமாகவும், எவ்வித மாற்றம் இல்லாமல் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு, பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.மேலும், மூன்றாம் காலாண்டிற்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை குறித்த விபரமும் வெளிவர உள்ளது. 20 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு பற்றாக்குறை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழனன்று, ஒபெக் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், விலை ஏற்றத்தை கொண்டு வர, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து, உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் இறங்கலாம்.
மேலும், வார இறுதி நாட்களான, வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில், நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்த கருத்துக் கணிப்புகள் வர உள்ளன. இதில் ஏற்படும் மாற்றங்கள், வரும் லோக்சபா தேர்தலில் பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தால், சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் இதன் அடிப்படையிலேயே அமையும்.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி, அதன் ரெசிஸ்டென்ஸ், 10930 மற்றும் 11100 ஆகும். சப்போர்ட் 10720 ஆகும்.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|