பதிவு செய்த நாள்
04 டிச2018
03:55
புதுடில்லி:இந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக, மகேந்திர சிங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மகேந்திர சிங்கி, டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும், ஷைலேந்திர சொக்ஷிக்கு பதிலாக புதிய தலைவராக, தற்போது, மகேந்திர சிங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, மகேந்திர சிங்கி கூறியதாவது:சிறந்த வளர்ச்சி, உள்கட்டுமான மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்திய சிமென்ட் துறை, அதன் வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த தருணத்தில் உள்ளது.
சங்கத்தை நிலையான, உலகளாவிய வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து செல்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.சிங்கி, இதற்கு முன், ராஜஸ்தான் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். டால்மியா பாரத் குழுமத்தில் சேர்வதற்கு முன், ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|