பதிவு செய்த நாள்
04 டிச2018
04:03
மும்பை, டிச. 4–
‘‘தற்போதைய சூழலில், அனைத்து நாடுகளும், பொருளாதாரத்தை உருவாக்க, எல்லை தாண்டி வர்த்தகம் புரிவது தவிர்க்க முடியாததாக உள்ளது. தடைகளை அகற்றி, தாராளமாக வர்த்தகம் புரிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:ஒவ்வொரு நாடும், அதன் நலனுக்காக, முடிந்த அளவிற்கு வர்த்தகத் தடைகளை குறைக்க முன்வர வேண்டும்.எந்த ஒரு நாடும், அனைத்து சரக்குகளையும் தயாரிக்க முடியாது.அதுபோல, நுகர்வோருக்கு தேவையான சிறந்த தரமான சேவைகளையும், ஒரே நாடு வழங்க முடியாது.இதை கருத்தில் கொண்டு, வர்த்தகத்திற்கு தடையாக உள்ள அம்சங்களை அகற்ற வேண்டும்.இந்தியா, அனைத்து நாடுகளுடனான வர்த்தகத்தை மேலும் சுலபமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகத் தரத்திலான, வர்த்தக நடைமுறைகளையும் பின்பற்றுகிறது.இது போன்ற காரணங்களால், எல்லை தாண்டிய வர்த்தகத்தில் சிறப்பாகச் செயல்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, 146வது இடத்தில் இருந்து, 80வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|