‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை ‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை ...  ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அன்னிய பங்கு சந்தையில் இந்திய நிறுவனங்கள்நேரடியாக அனுமதிக்க, ‘செபி’க்கு உயர்மட்டக் குழு பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2018
23:29

புதுடில்லி:‘வெளிநாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளின் பட்டியலில் நேரடியாக இடம் பெற, இந்திய நிறுவனங்களை அனுமதிக்கலாம்’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான –‘செபி’க்கு, உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.


தற்போது, இந்திய நிறுவனமொன்று, அதன் பங்குகளை, வெளிநாட்டு பங்குச் சந்தையில் இணைக்க விரும்பினால், அந்நாட்டின், ‘டெபாசிட்டரி ரிசீப்ட்’ மூலமாகத் தான், பட்டியலிட முடியும்.அதுபோல, வெளிநாட்டு நிறுவனம், இந்திய பங்குச் சந்தை பட்டியலில் இணைய, ‘ஐ.டி.ஆர்.,’ எனப்படும், இந்திய டெபாசிட்டரி ரிசீப்ட் அவசியம்.


இதற்கு பதிலாக, இந்திய – அன்னிய நிறுவனங்கள், நேரடியாக பரஸ்பரம், பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவது குறித்து ஆராய, ‘செபி’யின் செயல் இயக்குனர், சுர்ஜித் பிரசாத் தலைமையில், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.பொருளாதார வளர்ச்சிஇக்குழு, ‘செபி’க்கு அளித்துள்ள அறிக்கை:இந்திய நிறுவனங்களும், அன்னிய நிறுவனங்களும், பரஸ்பரம், பங்குச் சந்தைகளில், நேரடியாக பட்டியலிட அனுமதி வழங்கலாம். அதற்கான, சட்ட வரையறை, நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.


இந்தியாவுடன், நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.இதன் மூலம், இந்திய நிறுவனங்களுக்கு, குறைந்த செலவில், அன்னிய மூலதனம் கிடைக்கும்.அன்னிய நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் நேரடியாக இடம்பெறும்போது, பரவலான முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும். இது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.


இந்திய நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்து, பங்குச் சந்தையில் இடம் பெறாத நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் நேரடியாக பட்டியலிட அனுமதிக்கலாம். பொது கருத்துஅந்நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்ட திட்டத்தின் கீழ், பங்குச் சந்தைகளில் இடம் பெறலாம். அந்நிறுவனங்கள், இந்திய நிறுவன சட்டத்தை போன்ற சட்டங்களின் கீழ் வரும்.அந்நாடுகள் பின்பற்றும் ‘வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ நடைமுறை மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு விதிமுறைகளை, ஏற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


உயர்மட்டக் குழுவின் பரிந்துரை, பொது கருத்துக்காக, ‘செபி’ வலைதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இது குறித்து, வரும், 24க்குள் கருத்து தெரிவிக்கலாம் என, அறிவிக்கப் பட்டு உள்ளது.‘மசாலா பாண்டு’ கடன் பத்திரங்கள்இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் நேரடியாக இடம் பெற முடியாது.


இது, ‘மசாலா பாண்டு’ எனப்படும் கடன்பத்திர வெளியீடுகளுக்கு பொருந்தாது. இந்திய நிறுவனங்கள், ரூபாய் மதிப்பு அடிப்படையில், இந்த கடன்பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டலாம். சர்வதேச பங்குச் சந்தைகளில், இக்கடன்பத்திரங்கள் நேரடியாக பட்டியலிடப் படும்.அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும் பட்சத்தில், இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)