பதிவு செய்த நாள்
04 டிச2018
23:34
சென்னை:ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனம், பங்கு விற்பனைக்குப் பின்னர், உடனடியாக பணத்தை பெற வசதியாக, இ- – ஏ.டி.எம்., சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஷில்பா குமார் கூறியதாவது:இ- – ஏ.டி.எம்., சேவை மூலம், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றஉடனேயே, உடனடியாக அவர்களால் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.தற்போது, பங்குகளை விற்ற பின்னர், வர்த்தக தினத்தில் இருந்து இரண்டு வேலை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
இது, இந்த இ –- ஏ.டி.எம்., நடைமுறையில் தவிர்க்கப்படும்.ஐ.சி.ஐ.சி.ஐ., டைரக்ட் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், இந்த வசதி கூடுதல் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது. இதற்காக மும்பை பங்குச் சந்தையுடன் இணைந்து, இந்த சேவை வழங்கப்படுகிறது.வாடிக்கையாளர்கள் பங்குகளை விற்ற பின்னர், 30 நிமிடத்தில் எந்த ஒரு, ஏ.டி.எம்-., சென்டருக்கும் சென்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
பங்குகளை விற்ற பின்னர், ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சமாக ஒரு நாளில், 50 ஆயிரம் ரூபாய் வரை கணக்கில் செலுத்தப்படும்.மும்பை பங்குச் சந்தையின் மூலம் மேற்கொள்ளப் பட்டு, விற்கப்படும் பங்கு வர்த்தகம் அனைத்திற்கும், இந்த வசதி கிடைக்கும்.இது, எங்களது, 45 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|