பதிவு செய்த நாள்
04 டிச2018
23:50
புதுடில்லி:தனியார் துறை வங்கியான, யெஸ் பேங்கின் துணை நிறுவனமான, யெஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், இரண்டு மியூச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த இரண்டு திட்டங்களையும், அறிமுகப்படுத்துவதற்கான அனுமதியை, இந்நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடமிருந்து பெற்றுள்ளது.இந்தியாவில் மிகச் சமீபத்தில், மியூச்சுவல் பண்டு துறையில் கால்பதித்த நிறுவனமாகும்,யெஸ் அஸெட் மேனேஜ்மென்ட்.தற்போது இந்தியாவில், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு துறையில் வணிகம் செய்து வருகின்றன.
யெஸ் நிறுவனம், ‘யெஸ் லிக்யுட் பண்டு’ மற்றும் ‘யெஸ் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்டு’ என, இரண்டு மியுச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
மியூச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகம் செய்வது குறித்து, ஏற்கனவே யெஸ் பேங்க், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அனுமதியை பெற்றுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|