பதிவு செய்த நாள்
05 டிச2018
23:28
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அதன் ஊழியர்களுக்கு, 18.24 கோடி பங்குகளை, சலுகை விலையில் வழங்க முடிவு செய்துள்ளது.இவ்வங்கியின் இயக்குனர் குழு, இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.
தகுதியுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள பங்குகளின் விலை குறித்த விபரத்தை, வங்கி தெரிவிக்கவில்லை.எனினும்,இது,தற்போதைய சந்தை விலையை விட குறைவாக இருக்கும். நேற்று, மும்பை பங்குச் சந்தையில், ஐ.ஓ.பி., பங்கின் விலை, 14.30ல் நிலை கொண்டது.மத்திய அரசு, 2017, மார்ச்சில், பொதுதுறை வங்கிகள், அவற்றின் ஊழியர்களுக்கு, சலுகை விலையில் பங்குகளை வழங்க அனுமதி அளித்தது. வங்கிகள், திறமையானஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், நிதியாதாரத்தை மேம்படுத்தவும், இத்திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல வங்கிகள், இத்திட்டம் மூலம், ஊழியர்களுக்கு பங்குகளை ஒதுக்கி, குறிப்பிடத்தக்க தொகையை திரட்டிக் கொண்டன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|