பதிவு செய்த நாள்
05 டிச2018
23:39
புதுடில்லி: மாருதி சுசூகி நிறுவனம்,அதன் வாகனங்களின் விலையை, ஜனவரி மாதத்திலிருந்து உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகிய காரணங்களால், இந்த விலை அதிகரிப்பு என, மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.இருப்பினும், எந்த கார்களுக்கு எந்த அளவுக்கு விலை உயர்வு என்பது குறித்து, எதுவும் தெரிவிக்கவில்லை. தற்சமயம், நிறுவனம் அது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் அன்னிய கரன்சிகளுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் ஆகிய காரணங்களால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஜனவரி மாதத்திலிருந்து, பல கார்களின் விலை அதிகரிக்க இருக்கிறது. இந்த விலை உயர்வு, ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கெனவே, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.‘இசுசூ மோட்டார்’ நிறுவனம், 1 லட்சம் ரூபாய் வரை விலையை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல், ‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ நிறுவனமும், 4 சதவீத அளவுக்கு ஜனவரி மாதம் முதல் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|