‘வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., உதவி தேவையில்லை’ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறுகிறார் ‘வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., உதவி தேவையில்லை’ரிசர்வ் வங்கி ... ...  பண புழக்கத்தை பெருக்கும் நடவடிக்கை தொடரும்:ஆர்.பி.ஐ., துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பண புழக்கத்தை பெருக்கும் நடவடிக்கை தொடரும்:ஆர்.பி.ஐ., துணை கவர்னர் விரால் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைபணவீக்க மதிப்பீட்டை குறைத்தது ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
23:43

மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் விலை சரிவால், நாட்டின் பணவீக்க மதிப்பீட்டையும் குறைத்துள்ளது.

மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தலைமையில், மூன்று நாட்கள் நடைபெற்ற நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனை கூட்டம், நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, உர்ஜித் படேல் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட, நிதிக்கொள்கை குழுவின் அறிக்கை:


ரெப்போ வட்டி, 6.5 சதவீதமாக மாற்றமின்றி தொடரும். ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான, ‘ரிவர்வ்ஸ் ரெப்போ’ வட்டியும், 6.25 சதவீதமாக மாற்றமின்றி நீடிக்கிறது. செப்டம்பரில், 3.7 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், அக்டோபரில், 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை சரிவால், சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.


அதனால், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில் பணவீக்க மதிப்பீடு, 2.7 – 3.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, 2019 -– 20ம் நிதியாண்டின், முதல் அரையாண்டில், 3.8 – 4.2 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, நிதியமைச்சகத்துடனான மோதல், ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு – 7ஐ முதன் முறையாக பயன்படுத்தியது, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யாவின் சர்ச்சை பேச்சு ஆகியவை குறித்து, செய்தியாளர்கள் கேட்டனர்.


அதற்கு, ‘நிதிக் கொள்கை குழு அறிக்கை தொடர்பாகத் தான் இந்த சந்திப்பு’ எனக் கூறி, உர்ஜித் படேல் பதில் அளிக்க மறுத்து விட்டார்.எப்போது உயரும்?சில்லரை பணவீக்கம், 5 சதவீதத்தை நெருங்கும் போது, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை உயர்த்தும். இந்த உயர்வு, 2019, ஜூனில் நிகழ வாய்ப்புள்ளது; அதுவரை, ரெப்போ வட்டி உயராது.


நடப்பு நிதியாண்டில், இதுவரை, ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தை முதலீடுகள் மூலம், 1.66 லட்சம் கோடி ரூபையை புழக்கத்தில் விட்டுள்ளது. எனினும், பணப்புழக்க நெருக்கடி இன்னும் முழுமையாக தீரவில்லை.தெரசா ஜோன், ஆய்வாளர், நிர்மல் பங்க்வட்டி நிர்ணய முறையில் மாற்றம்கடன்தாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்வங்கிகள் தற்போது, எம்.சி.எல்.ஆர்., எனப்படும் குறைந்தபட்ச வட்டி நடைமுறையை கடைப்பிடிக்கின்றன. இந்த வட்டிக்கு குறைவாக, அவை நிர்ணயிக்க முடியாது. இது, வங்கிகள் திரட்டும் டெபாசிட் மற்றும் வழங்கும் கடன் ஆகியவற்றுக்கான செலவினங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.


இந்த நடைமுறையை, ரிசர்வ் வங்கி முடிவுக்கு கொண்டு வர உள்ளது. வங்கிகள், 2019, ஏப்., 1 முதல், வெளிச் சந்தையில், அதாவது ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி அல்லது அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், கடனுக்கான வட்டியை நிர்ணயிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இதனால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை குறைத்தாலும், அதன் பயனை, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இது, கடன்தாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அறிவிப்பாகும்.ரூ.10,000 கோடி புழக்கத்திற்கு வருகிறதுரிசர்வ் வங்கி, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதையொட்டி இன்று, 10 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிற்கு, வெளியாரிடம் இருந்து அரசு கடன் பத்திரங்கள் வாங்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


மேலும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 12 நாட்கள் முதிர்வைக் கொண்ட, மத்திய அரசின் ரொக்க நிர்வாக பத்திரங்களை ஏலம் விடவும், ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது, இந்த நடவடிக்கைகள், ஐ.எல் அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்களால் ஏற்பட்ட பணப்புழக்க நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)