பதிவு செய்த நாள்
07 டிச2018
00:16
ஈரோடு:ஈரோடு ஆவின் மூலம் உற்பத்தியாகும் நெய், வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதால், கத்தாரில் விரைவில் அறிமுக விழா நடக்க உள்ளது.
ஈரோடு, சித்தோடு ஆவின் நிறுவனம் சார்பில், 3.25 லட்சம் லிட்டர் பால், தினமும் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் பாக்கெட் தவிர, மீதி பாலில் வெண்ணெய், நெய், பால்கோவா, பால் பவுடர், ஐஸ் கிரீம் தயாரிக்கப்பட்டு, பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், ஈரோடு ஆவின் நிறுவனத்தின் நெய் மற்றும் பால் பவுடரை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆவின் பொது மேலாளர், லதா கூறியதாவது:ஆவின் நிறுவனத்தின் கிளைகள், சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங் நாடுகளில் உள்ளன. இக்கிளைகளுக்கு, சேலம் ஆவினில் இருந்து பால் செல்கிறது. ஈரோடு ஆவினில் இருந்து சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார், மலேஷிய நாடுகளுக்கு நெய் அனுப்ப, மத்திய அரசு உரிமம் வழங்கி, ஏற்றுமதிக்கு அனுமதி தந்துள்ளது. இம்மாத இறுதிக்குள், கத்தாரில் நெய் அறிமுக விழா நடக்க உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து, பிற பொருட்களை அனுப்பவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|