பதிவு செய்த நாள்
08 டிச2018
04:40
மும்பை:‘‘வங்கிகள், அவற்றின் சொந்த நலனை கருத்தில் கொண்டு, நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் மூலதனத்தை பராமரிக்க வேண்டும்,’’ என, ரிசர்வ் வங்கி, செயல் இயக்குனர், சுதர்சன் சென் தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
வர்த்தகப் பிரச்னைகளும், நிதி நெருக்கடியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவை, எப்போதும் இருக்கும்.அதனால், வங்கிகள், பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடிய இடர்பாட்டை சமாளிக்கும் வகையில், அதிகமான மூலதனத்தை பராமரிப்பது அவசியம். வங்கிகள், அவற்றின் மூலதன இருப்பு விகிதத்தை, நிர்ணயிக்கப்பட்டுள்ள, 8 அல்லது, 9 சதவீதத்திற்கும் அதிகமாக பராமரித்தால், இடர்ப்பாடு ஏற்படும்போது சமாளிக்கலாம்.
இல்லையென்றால், நிதிச் சந்தையின் தன்னிச்சையான செயல்பாடுகள் காரணமாக பாதிக்கப்படலாம்.வங்கிகளின் குறைந்தபட்ச மூலதன இருப்பு விகிதம், 9 – -53 சதவீதம் வரை இருக்கலாம் என, ஆய்வுகள் கூறுகின்றன. சில நாடுகளில், குறைந்தபட்ச மூலதன இருப்பு விகிதம், 8 சதவீதமாக உள்ளபோதிலும், வங்கிகள், 14 சதவீதத்தை பராமரித்து வருகின்றன.வங்கிகள், வாராக் கடனுக்கு, 50 சதவீத நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதை உயர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|