‘கூடுதல் மூலதனம் வங்கிகளை காக்கும்’ ‘கூடுதல் மூலதனம் வங்கிகளை காக்கும்’ ...  தொடர் சரிவில்  மல்லிகை விலை   தொடர் சரிவில் மல்லிகை விலை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘கோட்டக் மகிந்திரா’ வங்கி பங்கு விர்ர்ர்...வாரன் பபெட் முதலீடு செய்ய உள்ளதால் திடீர் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
04:45

மும்பை:பங்குச் சந்தை ஜாம்பவான் என, உலகளவில் அழைக்கப்படும், வாரன் பபெட், கோட்டக் மகிந்திரா வங்கியில் முதலீடு செய்யப் போவதாக தகவல் வெளியானதை அடுத்து, நேற்று, அதன் பங்கு விலை, திடீர் என, உச்சத்திற்கு சென்றது.

கோட்டக் மகிந்திரா வங்கியில், அதன் நிறுவனர், உதய் கோட்டக் மற்றும் குடும்பத்தாருக்கு, 29.79 சதவீத பங்கு மூலதனம் உள்ளது.ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, உதய் கோட்டக், தன் பங்கு மூலதனத்தை, இம்மாத இறுதிக்குள், 20 சதவீதமாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், உதய் கோட்டக்கின், 10 சதவீத பங்குகளை, வாரன் பப்பெட்டின் பெர்க் ஷையர் ஹாத்வே நிறுவனம் வாங்க உள்ளதாக, நேற்று தகவல் வெளியானது.

இது குறித்த பேச்சு, இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், 28 ஆயிரம் கோடி முதல், 42 ஆயிரம் கோடி ரூபாய் வரை, பங்கு விற்பனை மதிப்பு இருக்கும் என, தனியார் டிவி ஒன்று தெரிவித்தது.வாரன் பபெட், எப்போதும், சாதாரணமான, அதே சமயம், சிறப்பான எதிர்காலம் உள்ள நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து, பின்னாளில் லாபம் பார்ப்பது வழக்கம்.

அதனால், கோட்டக் மகிந்திரா வங்கியில் வாரன் பபெட் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானதும், முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கினர். இதனால், பங்கின் விலை, திடீரென உச்சத்திற்கு சென்றது.மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே, பங்கு விலை, 14 சதவீதம் உயர்ந்து, 1,345 ரூபாய் வரை சென்றது.


வர்த்தகத்தின் இறுதியில், முன்தினத்தை விட, 104.30 ரூபாய் அதிகரித்து, 1,284.55 ரூபாயில் நிலை கொண்டது.பங்கு விற்பனை குறித்து, உதய் கோட்டக் கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை. எனினும், விரைவில், அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)