பதிவு செய்த நாள்
08 டிச2018
04:45
மும்பை:பங்குச் சந்தை ஜாம்பவான் என, உலகளவில் அழைக்கப்படும், வாரன் பபெட், கோட்டக் மகிந்திரா வங்கியில் முதலீடு செய்யப் போவதாக தகவல் வெளியானதை அடுத்து, நேற்று, அதன் பங்கு விலை, திடீர் என, உச்சத்திற்கு சென்றது.
கோட்டக் மகிந்திரா வங்கியில், அதன் நிறுவனர், உதய் கோட்டக் மற்றும் குடும்பத்தாருக்கு, 29.79 சதவீத பங்கு மூலதனம் உள்ளது.ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, உதய் கோட்டக், தன் பங்கு மூலதனத்தை, இம்மாத இறுதிக்குள், 20 சதவீதமாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், உதய் கோட்டக்கின், 10 சதவீத பங்குகளை, வாரன் பப்பெட்டின் பெர்க் ஷையர் ஹாத்வே நிறுவனம் வாங்க உள்ளதாக, நேற்று தகவல் வெளியானது.
இது குறித்த பேச்சு, இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், 28 ஆயிரம் கோடி முதல், 42 ஆயிரம் கோடி ரூபாய் வரை, பங்கு விற்பனை மதிப்பு இருக்கும் என, தனியார் டிவி ஒன்று தெரிவித்தது.வாரன் பபெட், எப்போதும், சாதாரணமான, அதே சமயம், சிறப்பான எதிர்காலம் உள்ள நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து, பின்னாளில் லாபம் பார்ப்பது வழக்கம்.
அதனால், கோட்டக் மகிந்திரா வங்கியில் வாரன் பபெட் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானதும், முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கினர். இதனால், பங்கின் விலை, திடீரென உச்சத்திற்கு சென்றது.மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே, பங்கு விலை, 14 சதவீதம் உயர்ந்து, 1,345 ரூபாய் வரை சென்றது.
வர்த்தகத்தின் இறுதியில், முன்தினத்தை விட, 104.30 ரூபாய் அதிகரித்து, 1,284.55 ரூபாயில் நிலை கொண்டது.பங்கு விற்பனை குறித்து, உதய் கோட்டக் கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை. எனினும், விரைவில், அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|