ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் மார்ச் வரை, ‘கெடு’ நீட்டிப்பு ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் மார்ச் வரை, ‘கெடு’ நீட்டிப்பு ...   இந்­தி­யா­வில் மருத்­துவ காப்­பீட்­டின் நிலை இந்­தி­யா­வில் மருத்­துவ காப்­பீட்­டின் நிலை ...
கட்டுமான துறையில் 2.50 லட்சம் வேலைவாய்ப்பு:ஆளில்லா குட்டி விமானம் இயக்குவோருக்கு அதிர்ஷ்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2018
05:37

மும்பை:வரும் ஆண்டுகளில், கட்டுமான துறையில் மட்டும், ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்க, 2.50 லட்சம் பேர் தேவைப்படுவர் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

டிரோன் குறித்து, இ.சி.ஐ., – பி.டபிள்யு.சி., நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:வரும் ஆண்டுகளில், நெடுஞ்சாலை, மேம்பாலம், குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும், டிரோன்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கும்.உலகளவில், கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

அதனால், இத்துறையில்வர்த்தக ரீதியிலான டிரோன்களின் தேவையும் அதிகமாக இருக்கும்.இது, டிரோன்களை இயக்குவோருக்கான வேலைவாய்ப்பு பெருகவும் வழி வகுக்கும். வரும் ஆண்டுகளில், இத்துறையில், 2.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.தற்போது, கட்டுமான வடிவமைப்பை திட்டமிடுவது, பணிகளை பார்வையிடுவது, பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வது, முப்பரிமாண வரைபடங்களை தயாரிப்பது உள்ளிட்டவற்றுக்கு, டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், கட்டுமான நிறுவனங்கள், அவசியமற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள முடிகிறது.கட்டுமான பகுதியின் பாதுகாப்பை, ஆட்கள் மூலம் கண்காணிப்பதை விட, டிரோன்கள் மூலம், உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்க முடிவதால், திட்டச் செலவும் குறைகிறது.அதனால், கட்டுமான துறையில், பணியிடங்களில் டிரோன்களின் பயன்பாடு, 239 சதவீதம் உயர்ந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில், டிரோன் சந்தை. 6,230 கோடி ரூபாயாக உயரும். இது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், டிரோன்களின் பயன்பாடு அதிகரிக்கும் சூழலில், பல மடங்கு உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பெருகும் பயன்பாடுதரை கட்டுப்பாடு சாதனம் மூலம் இயக்கப்படும், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு, வேகமாக அதிகரித்து வருகிறது. கனிம வள ஆய்வு, கட்டுமானம், திரைப்படம், திருமண விழா போன்றவற்றில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)