பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா ...  ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில்  பருவ நிலையால் விற்பனை சரிவு ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கோட்டக் மகிந்திரா வங்கியை கவனிிக்கும் பந்தனர் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
23:48

புதுடில்லி:நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான பிரச்னையில், மகிந்திரா கோட்டக் வங்கியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது, பந்தன் வங்கி.


இது குறித்து பந்தன் வங்கி தரப்பில் கூறியதாவது:கோட்டக் மகிந்திரா வங்கி, அதன் நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, இம்மாத இறுதிக்குள், 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி, கோட்டக் வங்கி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.


இதேபோல், பந்தன் வங்கிக்கும், நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைக்குமாறு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.பந்தன் வங்கி, நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, மூன்று ஆண்டுகளுக்குள், 82 சதவீதத்திலிருந்து, 40 சதவீதமாக, குறைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.ஆனால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உத்தரவை நிறைவேற்ற இயலாததால், புதிதாக கிளைகளை துவக்க, ரிசர்வ் வங்கி தடைவிதித்து விட்டது.


இந்நிலையில், கோட்டக் மகிந்திரா வங்கி, நீதிமன்றத்தை அணுகிஉள்ளதால், அது குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.இவ்வாறு வங்கி தரப்பில் கூறினர்.பந்தன் வங்கிக்கு தற்போது, 937 கிளைகள் உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், கிளைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


பந்தன் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான, சந்திரா சேகர் கோஷ் இது குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)