பதிவு செய்த நாள்
13 டிச2018
23:22
சென்னை:‘விசா கார்டு’ நிறுவனம், இரண்டு கோடி, ‘காண்டாக்ட்லெஸ்’ என்ற தொடர்பற்ற அட்டைகளை, இந்தியாவில் இதுவரை வினியோகம் செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அந்தநிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:விசா கார்டு நிறுவனம், 2015ம் ஆண்டு, காண்டாக்ட்லெஸ் என்ற தொடர்பற்ற அட்டைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகப்படுத்திய மூன்று ஆண்டுகளில், இதுவரை இரண்டு கோடி அட்டைகள், இந்தியாவில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் காண்டாக்ட்லெஸ் கார்டு வழியாக, பணம் செலுத்தும் முறையை ஏற்றுக் கொண்ட மிகப் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.மேலும், 33 லட்சத்துக்கும் அதிகமான வணிகர்கள், ரொக்கமில்லா பணம் செலுத்தும் முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். காண்டாக்ட்லெஸ் கார்டு வழியாக பணம் செலுத்தும் முறை, மத்திய அரசின் தொலைநோக்கு திட்டமான, ‘டிஜிட்டல் இந்தியா’விற்கு முக்கியமானது.
மேலும், இந்த கார்டு மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்குவதுடன், ‘செக் அவுட்’ நேரமும், நிமிடங்களிலிருந்து வினாடிகளாகக் குறைத்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|