இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை ...  சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம் சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா, போர்டு கார் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
23:25

புதுடில்லி:டாடா மோட்டார்ஸ், போர்டு நிறுவனங்கள், பயணியர் கார்களின் விலையை, ஜன., 1ல் உயர்த்த உள்ளன.


இது குறித்து, டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன பிரிவின் தலைவர், உனித் மயங்க் பரீக் கூறியதாவது:மூலப் பொருட்கள் செலவினம் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரங்கள், அன்னியச் செலாவணி மதிப்பின் தாக்கம், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவற்றால், விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை.


வரும், 2019, ஜன., 1 முதல், அனைத்து பயணியர் கார்களின் விலை, 40 ஆயிரம் ரூபாய் வரை உயத்தப்பட உள்ளது. வரும் ஆண்டு துவக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்படும், ‘ஹாரியர்’ பன்முக பயன்பாட்டு கார், விற்பனைக்கு வர உள்ளது. இந்தாண்டு போல, வரும் ஆண்டும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, வாடிக்கையாளர்கள் துணை நிற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிறுவனம், சிறிய, ‘நானோ’ கார் முதல், பன்முக பயன்பாட்டு வாகனமான, ‘ஹெக்ஸா’ வரை, 2.36 – 17.97 லட்சம் ரூபாய் விலையில், விற்பனை செய்கிறது.போர்டு இந்தியா நிறுவனம், கார் விலையை, 2.5 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம், ‘ப்ரீஸ்டைல்’ முதல், ‘மஸ்டாங்’ மாடல் வரையிலான பயணியர் கார்களை, 5.23 – 74.62 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறது.


மாருதி சுசூகி, டெயோட்டோ கிர்லோஸ்கர், பி.எம்.டபிள்யு., இசுசூ உள்ளிட்ட நிறுவனங்களும், வரும் ஆண்டு, ஜனவரியில், கார் விலையை உயர்த்த உள்ளதாக, ஏற்கனவே அறிவித்துள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)