பதிவு செய்த நாள்
13 டிச2018
23:25
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ், போர்டு நிறுவனங்கள், பயணியர் கார்களின் விலையை, ஜன., 1ல் உயர்த்த உள்ளன.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன பிரிவின் தலைவர், உனித் மயங்க் பரீக் கூறியதாவது:மூலப் பொருட்கள் செலவினம் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரங்கள், அன்னியச் செலாவணி மதிப்பின் தாக்கம், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவற்றால், விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை.
வரும், 2019, ஜன., 1 முதல், அனைத்து பயணியர் கார்களின் விலை, 40 ஆயிரம் ரூபாய் வரை உயத்தப்பட உள்ளது. வரும் ஆண்டு துவக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்படும், ‘ஹாரியர்’ பன்முக பயன்பாட்டு கார், விற்பனைக்கு வர உள்ளது. இந்தாண்டு போல, வரும் ஆண்டும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, வாடிக்கையாளர்கள் துணை நிற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிறுவனம், சிறிய, ‘நானோ’ கார் முதல், பன்முக பயன்பாட்டு வாகனமான, ‘ஹெக்ஸா’ வரை, 2.36 – 17.97 லட்சம் ரூபாய் விலையில், விற்பனை செய்கிறது.போர்டு இந்தியா நிறுவனம், கார் விலையை, 2.5 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம், ‘ப்ரீஸ்டைல்’ முதல், ‘மஸ்டாங்’ மாடல் வரையிலான பயணியர் கார்களை, 5.23 – 74.62 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறது.
மாருதி சுசூகி, டெயோட்டோ கிர்லோஸ்கர், பி.எம்.டபிள்யு., இசுசூ உள்ளிட்ட நிறுவனங்களும், வரும் ஆண்டு, ஜனவரியில், கார் விலையை உயர்த்த உள்ளதாக, ஏற்கனவே அறிவித்துள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|