இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை ...  சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம் சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
3ம் கட்டமாக, ‘பாரத் இ.டி.எப்., 22’ வெளியீடு பங்கு விற்பனை இலக்கை எட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
23:34

புதுடில்லி:மத்­திய அரசு, ‘பாரத் இ.டி.எப்., 22’ திட்­டத்­தின் மூன்­றாம் கட்ட வெளி­யீட்டை, அடுத்த ஆண்டு, ஜன­வ­ரி­யில் மேற்­கொள்ள உள்­ளது.


நடப்பு நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்து, 80 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.
இந்­தாண்டு, இது­வரை, பங்கு விலக்­கல் மூலம், 33 ஆயிரம் கோடி ரூபாய் வசூ­லா­கி­யுள்­ளது.
இதில், இரு கட்­டங்­களில், ‘பாரத் இ.டி.எப்., 22’ வெளி­யீ­டு­கள் மூலம் கிடைத்த, 22,900 கோடி ரூபா­யும் அடங்­கும்.


இத்­திட்­டத்­திற்கு, முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் அதிக வர­வேற்பு காணப்­ப­டு­கிறது.பற்றாக்குறை
இந்­நி­லை­யில், ‘ஏர் இந்­தியா’ விற்­பனை கைவி­டப்­பட்­ட­தும், பவர் பைனான்ஸ், எஸ்.ஜே.வி.என்., நிறு­வ­னங்­க­ளின் பங்கு விற்­ப­னை­யின் தாம­தம் கார­ண­மா­க­வும், பங்கு விற்­பனை இலக்­கில், 15 ஆயி­ரம் கோடி ரூபாய் பற்­றாக்­குறை ஏற்­படும் என, மதிப்­பி­டப்­பட்­டு உள்­ளது.


அத­னால், வரும் ஜன­வ­ரி­யில், மூன்­றாம் கட்­ட­மாக, ‘பாரத் இ.டி.எப்., 22’ வெளி­யீடு மேற்­கொள்ள, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.இதில், 12 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை கிடைக்­கும். அத்­து­டன், பொதுத் துறை நிறு­வன பங்­கு­களை திரும்­பப் பெறு­வ­தன் மூலம், 10 ஆயி­ரம் கோடி ரூபாய் கிடைக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது


மேலும், 2019, பிப்­ர­வ­ரிக்­குள், ஆர்.இ.சி., நிறு­வ­னத்­தின், 52.63 சத­வீத பங்­கு­களை, பவர் பைனான்ஸ் நிறு­வ­னத்­திற்கு விற்­ப­தன் மூலம், 15 ஆயி­ரம் கோடி ரூபாய், மத்­திய அர­சுக்கு கிடைக்­கும் எனத் தெரி­கிறது. இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மூலம், பங்கு விற்­பனை இலக்கை எட்ட, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.


எந்தெந்த நிறுவனங்கள்?


கடந்த, 2017 நவம்­ப­ரில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., கோல் இந்­தியா உள்­ளிட்ட, 16 நிறு­வ­னங்­கள், மூன்று வங்­கி­கள் மற்­றும் மூன்று தனி­யார் நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் அடங்­கிய, ‘பாரத் இ.டி.எப்.,- 22’ திட்­டம் அறி­மு­க­மா­னது.இதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., இந்­தி­யன் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்­கி­களும், தனி­யார் துறை­யைச் சேர்ந்த, ஆக்­சிஸ் பேங்க், ஐ.டி.சி., எல் அண்டு டி ஆகி­ய­வை­யும் இடம் பெற்­றுள்­ளன. மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், இத்­திட்­டம் பட்­டி­ய­லி­டப்­பட்டு, வர்த்­த­கம் நடை­பெற்று வரு­கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)