பதிவு செய்த நாள்
14 டிச2018
23:29
புதுடில்லி:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், மூன்று வகையான, இரு சக்கர வாகனங்களை, பெரு நாட்டில் அறிமுகம் செய்துள்ளது.
‘டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்.ஆர்., 310, டி.வி.எஸ்., என்.டி.ஓ.ஆர்.க்யு., 125 மற்றும் டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 4வி’ ஆகிய மூன்று வாகனங்களை, பெரு நாட்டில் அறிமுகம் செய்துள்ளது, டி.வி.எஸ்., நிறுவனம்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் பன்னாட்டு வணிகப் பிரிவின் துணைத் தலைவர், ஆர்.திலிப் கூறியதாவது:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், பெரு நாட்டில் வாகனங்களை விற்பதற்காக, இந்தியன் மோட்டோஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலம், 170 இடங்களில், டி.வி.எஸ்., வாகனங்கள் விற்பனைக்கு கிடைக்கும். தற்போது, லிமா நகரில் ஒரு ஷோரூம் திறக்கப்பட உள்ளது.
கடந்த ஆறு ஆண்டு களாக, இந்தியன் மோட்டோஸ் நிறுவனத் துடன் இணைந்து, பெரு நாட்டில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறோம்.குறிப்பாக, மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் வலுவாக இருக்கிறோம். தற்போது, இந்த மூன்று வாகனங்களையும் அறிமுகம் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|