பதிவு செய்த நாள்
14 டிச2018
23:40
சென்னை:ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய ஆலை ஒன்றை அமைக்க இருக்கிறது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் ஆந்திர முதல்வர், என்.சந்திரபாபு பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில் அமைக்கப்படும் இந்த ஆலை குறித்து, இந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது.
புதிதாக அமைக்கப்படும் இந்த ஆலையில், ஆண்டு ஒன்றுக்கு, 31.5 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்க முடியும்.இந்த ஆலை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுவிட்டது. நவீன முறையிலான இந்த ஆலை, மாசு ஏற்படுத்தாத, கழிவுகளை வெளித்தள்ளாத ஆலையாக இருக்கும்.கட்டுமான பணிகள், 15 மாதங்களில் முடிவுறும் என கருதுகிறோம்.
இந்த ஆலையை அமைப்பதன் மூலம், 300 புதிய நேரடி வேலை வாய்ப்பும், மறைமுகமாக, 1,000 வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். 2020ம் ஆண்டில் ஆலை செயல்படத் துவங்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|