பதிவு செய்த நாள்
14 டிச2018
23:52
மும்பை:நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டத்தில், வங்கியின் நிர்வாக கட்டமைப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக, சக்தி காந்ததாஸ் பொறுப்பேற்ற பின், அவர் தலைமையில், நேற்று முதன் முறையாக, அவ்வங்கியின் இயக்குனர் குழு கூடியது.இதில், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல், சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் எழுந்துள்ள சவால்கள் ஆகியவை குறித்து, விவாதிக்கப்பட்டன.
மேலும், பணப்புழக்க பிரச்னை, நிதி நிர்வாக நடைமுறை, வங்கிகளின் மந்தமான கடன் வளர்ச்சி, நிதிச் சேவை குறித்த விழிப்புணர்வு உட்பட, பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.மோதல்இதையடுத்து, ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது.‘அதில், வங்கி நிர்வாக நடைமுறை உட்பட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, வங்கியின் நிர்வாக கட்டமைப்பு நடைமுறைகள் குறித்து மேலும் ஆய்வு செய்வதென முடிவு செய்யப்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, நவ., 19ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தலைமையில் இயக்குனர் குழு கூட்டம் நடை பெற்றது.இதில், ரிசர்வ் வங்கியிடம் இருக்க வேண்டிய உபரி நிதியை வரையறை செய்வது குறித்து ஆராய, ஆறு பேர் அடங்கிய நிதி மேற்பார்வை குழு அமைப்பது என, முடிவு செய்யப்பட்டது.
இக்குழு, தீவிர கண்காணிப்பு திட்ட விதிமுறைகளை தளர்த்துவது குறித்தும் ஆராயும் என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இக்குழுவின் தலைவராக, ரிசர்வ் வங்கி கவர்னர் இருக்க வேண்டும் என, உர்ஜித் படேல் வலியுறுத்தினார். ஆனால், ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு வழிகாட்டுதல்படி, தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை, மத்திய அரசு கோரியது.இதில், இருதரப்பிலும் உடன்பாடு ஏற்படாததால், குழு அமைப்பது தள்ளிப் போனது.
இதனிடையே, உர்ஜித் படேல், சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கூறி, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.பொது கருத்துஇதையடுத்து, அப்பொறுப்புக்கு வந்துள்ள, சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் நிர்வாக கட்டமைப்பை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.
தற்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில், நான்கு துணை கவர்னர்கள், நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுடன், ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவும் இணைந்து, நிர்வாக நடைமுறையில் பங்கேற்க வேண்டும் என, மத்திய அரசு விரும்பு கிறது. இதன் மூலம், பொது கருத்தின் அடிப்படையில், சமூக பொருளாதார சவால்களை சுலபமாக சமாளிக்கலாம் என்பது, மத்திய அரசின் திட்டம்.இதற்கு, ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவில் சமீபத்தில் இணைந்த, குருமூர்த்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
ரிசர்வ் வங்கியிடம், ஜூன் இறுதி நிலவரப்படி, உபரியாக, 9.33 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இதில், 25 சதவீதத்தை, பொதுத் துறை வங்கிகளுக்கு பங்கு மூலதனமாக வழங்கி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, தாராளமாக கடன் கிடைக்க வழி செய்யலாம் என, மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு, ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
தீவிர கண்காணிப்பு திட்ட விதிகளை தளர்த்தி, பாதிக்கப்பட்டுள்ள, 11 வங்கிகளை, கடன் வழங்க அனுமதிக்கலாம் என்ற, மத்திய அரசின் யோசனையும் ஏற்கப்படவில்லை.அதனால், 18 உறுப்பினர்கள் அடங்கிய, ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு, அவ்வங்கியின் நிர்வாக கட்டமைப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|