பதிவு செய்த நாள்
17 டிச2018
07:19
பழைய டெபிட் கார்டை மாற்றி சிப் பொருத்தப்பட்ட புதிய கார்டை பெறுவது உள்ளிட்ட முக்கிய நிதி செயல்பாடுகளை, இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் செய்து முடிப்பது அவசியமாகும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத்தவறியவர்கள், பிலேட்டட் ரிட்டர்ன் என, சொல்லப்படும், தாமதமான வரித்தாக்கலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் செய்ய வேண்டும். ஏனெனில், வருமான வரி புதிய சட்டத்தின்படி, இந்த கெடுவை கடந்த வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டும்.
பழைய மேக்னடிக் ஸ்டிரிப் முறையிலான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மாற்றிவிட்டு, சிப் பொருத்தப்பட்ட புதிய கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. எனவே, இதுவரை பழைய கார்டை மாற்றவில்லை எனில், உடனடியாக புதிய கார்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு முதல் பழைய கார்டுகள் செல்லாததாகிவிடும் என்பதால், அவற்றை பயன்படுத்த முடியாது. பழைய முறையிலான கார்டுகளைவிட சிப் பொருத்தப்பட்ட இ.வி.எம்., கார்டுகள் பாதுகாப்பானவை.ரிசர்வ வங்கி நெறிமுறைகள் படி, சி.டி.எஸ்., அல்லாத காசோலைகள் டிசம்பர் மாதத்திற்கு பின் செல்லாது. எனவே, இன்னமும் பழைய முறையில், சி.டி.எஸ்., அல்லாத காசோலை வைத்திருந்தால், புதிய காசோலையை பெற்றுக்கொள்ள வேண்டும். மொபைல் எண் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களின் நெட் பாங்கிங் சேவையை, இந்த மாதம் முதல் ஸ்டேட் பாங்க் முடக்கி வைக்க துவங்கியுள்ளது. நெட் பாங்கிங் வசதி தொடர ஸ்டேட் பாங்க் இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|