பதிவு செய்த நாள்
17 டிச2018
07:20
குடும்பத்தின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள, ஆயுள் காப்பீடு பெறுவது அவசியமாகும். ஆயுள் காப்பீடு பெறும்போது சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வதும் அவசியம். காப்பீடு தொடர்பான பல்வேறு அம்சங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், பிரீமியம் தொகையை குறைப்பதும் சாத்தியம்.
இளம் வயதில் காப்பீடுஒருவர், இளம் வயதிலேயே ஆயுள் காப்பீடு பெறுவது நல்லது. இதன் மூலம் குறைந்த பிரீமியத்தில், பொருத்தமான பாலிசியை தேர்வு செய்ய முடியும். உதாரணமாக, 30 வயதில் ஒரு கோடி ரூபாய்க்கான பாலிசிக்கான ஆண்டு பிரீமியம், 12 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம். 40 வயது எனில் இது, 19 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்பிருக்கிறது.ஆண்டு பிரீமியம்காப்பீடு நிறுவனங்கள் பலவித கால அளவுகளில் பிரீமியம் செலுத்த வழி செய்கின்றன.
காலாண்டு, அரையாண்டு, ஆண்டு அடிப்படையில் பிரீமியம் செலுத்தலாம். மாதாந்திர தொகை எனில், சற்று கூடுதலாக இருக்கலாம். ஆண்டு அடிப்படையிலான வாய்ப்பை தேர்வு செய்வது நல்லது. ஒரு முறை பிரீமியம் வசதியில் தள்ளுபடி உண்டு.பாலிசி காலம்பாலிசியை தேர்வு செய்யும் போது, அதற்கான காலம் சரியானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் இருக்கும் காலம் வரை பாலிசி காலம் இருப்பது நல்லது. மாத சம்பளம் பெறுபவர் எனில், 60 வயது வரை பாலிசி பெற்றிருப்பது நல்லது. ‘டெர்ம் பாலிசி’ எனில், முழு ஆயுள் கால பாலிசி பெறலாம்.
ஆரோக்கிய வாழ்வு
ஆயுள் காப்பீட்டில் பிரீமியம் தொகை பெருமளவு ஆரோக்கிய நிலையை சார்ந்திருக்கிறது. காப்பீடு நிறுவனங்கள் பாலிசிதாரரின் மருத்துவ வரலாற்றில் தனி கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக, புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவருக்கான பிரீமியம் அதிகமாக இருக்கும். எனவே, ஆரோக்கிய வாழ்க்கை முறை அவசியம்.திட்ட ஒப்பீடுகாப்பீடு திட்டங்களை தேர்வு செய்யும் போது, விளம்பரங்களை பார்த்தோ, உறவினர் அல்லது ஏஜென்ட் கருத்து அடிப்படையிலோ முடிவு எடுக்க கூடாது. பல்வேறு காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆனால், பிரீமியம் தொகை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, காப்பீடு பாதுகாப்பு அளவில் சமரசம் கூடாது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|