பதிவு செய்த நாள்
20 டிச2018
23:25
புதுடில்லி : வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை உருவாக்குவதற்கு அதிக ஆதரவு அளிக்கும் மாநிலங்களில், குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க விரும்புவோருக்கு, அதற்கான உருவாக்க மையங்கள், தொழில்நுட்ப உதவி, நிதி வசதி உள்ளிட்ட, ஏழு பிரிவுகளில், அதிக ஆதரவளிக்கும் மாநிலங்கள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், 27 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன. அவற்றில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க, தொழில் முனைவோருக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதில், குஜராத் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களை, கர்நாடகா, கேரளா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.
மத்திய அரசு, இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க, இந்தாண்டு ஜனவரியில், ‘ஸ்டார்ட் அப் இந்தியா ஆக் ஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஸ்டார்ட், அப் துறைக்கு, வரி செலுத்துவதில் சலுகை, குறித்த காலத்திற்கு, அதிகாரிகள் ஆய்வில் இருந்து விலக்கு, மூலதன ஆதாய வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|