பதிவு செய்த நாள்
21 டிச2018
23:28
புதுடில்லி : ‘‘நாட்டின் மின் வாகன தயாரிப்பை ஊக்குவிக்க, அவற்றுக்கான உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு, சுங்க வரியை குறைக்க வேண்டும்,’’ என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர், ஆனந்த் கீதே வலியுறுத்தி உள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கைச் சேர்ந்த, ‘நைப் மோட்டார்ஸ்’ நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும், ‘ரிக் ஷா, ஸ்கூட்டர், சைக்கிள்’ ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. இந்த வாகனங்களை அறிமுகப்படுத்தி, ஆனந்த் கீதே பேசியதாவது:தற்போது, மின் வாகனத்தில் பயன்படுத்தப்படும், ‘பேட்டரி, சார்ஜர், கன்ட்ரோலர், எனர்ஜி மானிட்டர், கம்ப்ரஸர், மோட்டார்’ ஆகியவற்றின் இறக்குமதிக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உலோகம், பிளாஸ்டிக் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கு, 28 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது.
இதை குறைக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.மேலும், மின் வாகனங்களை, ‘அசெம்பிளிங்’ செய்ய, உதிரிபாகங்களை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ இறக்குமதி செய்வதற்கு, சுங்க வரியை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பரிசீலிப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|