பதிவு செய்த நாள்
27 டிச2018
12:41
ஐதராபாத்: ‘‘வரும் ஆண்டில், ‘ ஐ.டி., – ஸ்டார்ட் அப்’ துறைகளில், ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்’’ என, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, வி.மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியதாவது:கடந்த ஏழு ஆண்டுகளாக, ஐ.டி., துறையில், துவக்க நிலை ஊழியர்களுக்கான ஊதியம் உயரவில்லை. முதன் முறையாக, இந்தாண்டு, 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு, 4.50 –- 5 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் இருந்து, ஐ.டி., துறை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பி வருவது தெரிகிறது.அமெரிக்கா, ‘எச் 1பி’ விசா விதிமுறைகளை கடுமையாக்கியதால், இந்திய நிறுவனங்கள், ஜப்பான், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|