ரூ.7 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்க்க இலக்கு ரூ.7 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை ஈர்க்க இலக்கு ...  அப்படியா அப்படியா ...
அந்நிய முதலீடு : சீனாவை மிஞ்சிய இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2018
15:18

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சீனாவை விட அதிகமான வெளிநாட்டு முதலீட்டை இந்தியா முதன்முறையாக ஈட்டியுள்ளது.

உலகளவில் மிகப்பெரிய சந்தைககள் கொண்ட நாடுகளில் சீனாவும், இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளின் மக்கள் தொகை அதிகம் என்பதால் அதற்கு ஏற்றவாறு சந்தைகளும் பெருமளவில் உள்ளன.

இந்திய சந்தைகளில் சில ஏற்ற - இறக்கம் இருந்தாலும் பொருளாதாரம் ஸ்திரமாகவே உள்ளது. 2018ம் ஆண்டில் 235 நிறுவனங்களின் மூலம் 37.76 பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டை இந்தியா ஈட்டியிருக்கிறது.

அண்டை நாடான சீனா, 32 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீட்டை ஈட்டியிருக்கிறது. இதன்மூலம் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவை முந்தியிருக்கிறது இந்தியா.


வர்த்தக போரால் வாய்ப்பு:

சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் நீடித்து வருவதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் கவனத்தை திருப்பியிருக்கின்றன. ஆன்-லைன் வர்த்தகம், இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் அது சார்ந்த நிறுவனங்கள், குறிப்பாக வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த துறைகளும் இந்தியாவில் ஆர்வம் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக நிறுவனங்கள் திவால் ஆவதை தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதால் உற்பத்தி சார்ந்த துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)