பதிவு செய்த நாள்
28 டிச2018
15:18
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சீனாவை விட அதிகமான வெளிநாட்டு முதலீட்டை இந்தியா முதன்முறையாக ஈட்டியுள்ளது.
உலகளவில் மிகப்பெரிய சந்தைககள் கொண்ட நாடுகளில் சீனாவும், இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளின் மக்கள் தொகை அதிகம் என்பதால் அதற்கு ஏற்றவாறு சந்தைகளும் பெருமளவில் உள்ளன.
இந்திய சந்தைகளில் சில ஏற்ற - இறக்கம் இருந்தாலும் பொருளாதாரம் ஸ்திரமாகவே உள்ளது. 2018ம் ஆண்டில் 235 நிறுவனங்களின் மூலம் 37.76 பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டை இந்தியா ஈட்டியிருக்கிறது.
அண்டை நாடான சீனா, 32 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீட்டை ஈட்டியிருக்கிறது. இதன்மூலம் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவை முந்தியிருக்கிறது இந்தியா.
வர்த்தக போரால் வாய்ப்பு:
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் நீடித்து வருவதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் கவனத்தை திருப்பியிருக்கின்றன. ஆன்-லைன் வர்த்தகம், இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் அது சார்ந்த நிறுவனங்கள், குறிப்பாக வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளன.
தொழில்நுட்பம் சார்ந்த துறைகளும் இந்தியாவில் ஆர்வம் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக நிறுவனங்கள் திவால் ஆவதை தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதால் உற்பத்தி சார்ந்த துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|