வெங்காய ஏற்றுமதி சலுகையை இரு மடங்கு உயர்த்த கோரிக்கைவெங்காய ஏற்றுமதி சலுகையை இரு மடங்கு உயர்த்த கோரிக்கை ... பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை பிடித்தது இந்தியா பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை ... ...
பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை பிடித்தது இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2018
04:23

புதுடில்லி : இந்­தாண்டு, பல்­வேறு பிரச்­னை­களை சந்­தித்த போதி­லும், இந்­திய பங்­குச் சந்­தை­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 38 ஆயி­ரத்து, 850 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன. இதன் மூலம், அதிக தொகை திரட்டி, சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களில், அமெ­ரிக்­கா­விற்கு அடுத்த இடத்தை, இந்­தியா பிடித்­துள்­ளது.

இது குறித்து, ‘யர்­னஸ்ட் அண்டு யங்’ நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: இந்­தாண்டு, இந்­திய பங்­குச் சந்­தை­கள், 161 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 38 ஆயி­ரத்து, 850 கோடி ரூபாய் திரட்டி, இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளன. அமெ­ரிக்கா, 261 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 42 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்டி, முத­லி­டத்தை தக்க வைத்­துக் கொண்­டுள்­ளது.

கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு சரிவு, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளின் பண நெருக்­கடி போன்ற பிரச்­னை­க­ளின் தாக்­கத்தை, இந்­திய பங்­குச் சந்­தை­கள் இந்­தாண்டு சந்­தித்­தன. இந்த நிலை­யி­லும், முதல் அரை­யாண்­டில் நில­விய சாத­க­மான சூழல் கார­ண­மாக, புதிய பங்கு வெளி­யீ­டு­கள் அதி­க­ரித்­துள்­ளன.

சந்தை நிலவரம் :
அதே­ச­ம­யம், இரண்­டா­வது அரை­யாண்­டில், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் குறைந்­துள்­ளன. அக்., – டிச., வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், இரண்டு புதிய பங்கு வெளி­யீ­டு­கள் தான் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது, கடந்த ஆண்டு இதே காலாண்­டில், ஒன்­பது வெளி­யீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதே காலத்­தில், சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வில் மேற்­கொள்­ளப்­பட்ட புதிய பங்கு வெளி­யீ­டு­கள், 31 லிருந்து, எட்­டா­கக் குறைந்­துள்­ளது. அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான வர்த்­த­கப் போர், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மப் பிரச்­னை­யால், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்ட பண நெருக்­கடி, ரூபாய் மதிப்­பின் சரிவு போன்ற கார­ணங்­க­ளால், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வில், புதிய வெளி­யீ­டு­கள் குறைந்­துள்­ளன.

புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு அனு­மதி பெற்ற பல நிறு­வ­னங்­கள், சாத­க­மற்ற சந்தை நில­வ­ரம் கார­ண­மாக, பொறுத்­தி­ருந்து வெளி­யீடு மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)