வலைதள உணவு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; நுகர்வோர் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்புவலைதள உணவு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; நுகர்வோர் பாதுகாப்புக்கு ... ...  சபரிமலை சீசனால் நுகர்வு சரிவு : முட்டைக்கோழி கொள்முதல் விலை, ‘டவுன்’ சபரிமலை சீசனால் நுகர்வு சரிவு : முட்டைக்கோழி கொள்முதல் விலை, ‘டவுன்’ ...
வங்கி இணைப்பு – மின்னணு பண பரிவர்த்தனையின் தாக்கம் ஏ.டி.எம்., மையங்கள் பயன்பாடு குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2018
00:31

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகளின் இணைப்பால், நாட்டில் உள்ள, ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கை, 2.07 லட்சமாகக் குறைந்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2016- – 17ம் நிதியாண்டில், நாட்டில், 2.08 லட்சம், ஏ.டி.எம்.,கள் செயல்பாட்டில் இருந்தன. இது, 2017 -– 18ம் நிதியாண்டில், 2.07 லட்சமாகக் குறைந்துள்ளது.இதே காலத்தில், வங்கி கிளையுடன் இணைந்த, ஏ.டி.எம்., மையங்கள் எண்ணிக்கை, 1.09 லட்சத்தில் இருந்து, 1.06 லட்சமாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், இதே காலத்தில், வங்கி கிளை சாராத இடங்களில் செயல்படும், ஏ.டி.எம்.,கள், 98 ஆயிரத்து, 545லிருந்து, ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.பொதுத் துறை வங்கி, ஏ.டி.எம்.,கள், 1.48 லட்சத்தில் இருந்து, 1.45 லட்சமாகக் குறைந்துள்ளது.தனியார் துறைதனியார் வங்கி, ஏ.டி.எம்.,கள், 58 ஆயிரத்து, 833லிருந்து, 60 ஆயிரத்து, 145 ஆக அதிகரித்துள்ளன.பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகளின் இணைப்பும், பெருகி வரும் மின்னணு பணப் பரிவர்த்தனைகளும், ஏ.டி.எம்., மையங்கள் குறைய வழி வகுத்துள்ளன.கடந்த, 2017, ஆக., – 2018, ஆக., வரையிலான ஓராண்டில், ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க் மற்றும் பேமன்ட் பேங்க்’ ஆகியவை தவிர்த்து, இதர வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்கள் எண்ணிக்கை, 2.04 லட்சமாகக் குறைந்துள்ளது.இதே காலத்தில், பெட்ரோல் நிலையங்கள், பல சரக்கு கடைகள் போன்றவற்றில், ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான சாதனங்களை நிறுவுவது அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், ஏ.டி.எம்.,கள் எண்ணிக்கை, 15 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும், சில ஆண்டுகளாக, இப்பிரிவின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.பரிவர்த்தனைநாட்டில், ரொக்கமின்றி, ‘டெபிட் கார்டு, இ – வாலட்’ போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளும் மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி, அபாரமாக உள்ளது.கடந்த 2013- – 14ம் நிதியாண்டில், இவ்வகை மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு, 8,100 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2017- – 18ம் நிதியாண்டில், 1.42 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மொபைல் போனில், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு, யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா சேவை உதவுகிறது. இந்த வசதி மூலம், கடந்த நிதியாண்டில், 1.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 91.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.இந்தாண்டு, ஏப்ரல் – செப்டம்பர் வரை, 2.67 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 157.9 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சிக்கன நடவடிக்கைநாட்டில், பொது மற்றும் தனியார் துறையில், 44 வங்கிகள் உள்ளன. கடந்த ஆண்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன், ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைத்துக் கொண்டது. இவ்வங்கிக்கு, 59 ஆயிரத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்.,கள் உள்ளன. பல வங்கிகள், சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக, லாபமற்ற, ஏ.டி.எம்.,களை மூடி வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)