இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு ... ... பங்குசந்தை நிலவரம் பங்குசந்தை நிலவரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ஆட்டோ பே’ வசதி தொடர வேண்டுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2018
23:52

பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில் சிப் பொருந்திய கார்டுகள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், பில்களை செலுத்துவதற்கான, ‘ஆட்டோ பே’ வசதியை தொடர தேவையான மாற்றத்தை செய்ய வேண்டும்.

ரிசர்வ் வங்கி நெறிமுறைகளின் படி, அனைத்து வங்கிகளும், ‘மேக்னடிக் ஸ்டிரைப்’ அடிப்படையிலான டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்காக, புதிய, இ.எம்.வி., சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்க வேண்டும். இதற்கான கெடு இன்றுடன் முடிவடைவதால், பெரும்பாலான வங்கிகள் இதற்கான செயல்முறையை ஏற்கனவே துவக்கி விட்டன.

புதிய சிப் பொருந்திய கார்டுகள் பாதுகாப்பு மிக்கவையாக கருதப்படுகின்றன. இவை, 16 இலக்க எண் கொண்டவை. ஏற்கனவே டெபிட் மற்றும் கிரெடிட் காரை மாற்றிக்கொள்ளாதவர்கள், இது தொடர்பாக வங்கியை அணுகி, புதிய கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.புதிய டெபிட் கார்டு பெற்று அதை முதல் முறை பயன்படுத்திய பின், பழைய கார்டு தானாக செயல் இழந்துவிடும். இதற்கான விதிகள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

பழைய கார்டு செயலிழக்கும் போது, அதனுடன் பில்களை தானாக செலுத்த வழி செய்யும் ’ஆட்டோ பே’ வசதி கொடுக்கப்பட்டிருந்தால், அதற்கான உத்தரவும் செயலிழந்து விடும்.எனவே புதிய கார்டு தொடர்பாக, ஆட்டோபே வசதியை மறக்காமல் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ‘நெட் பேங்கிங்’ சேவையில் நுழைந்த உடன், ‘ஸ்டாண்டிங் இன்ஸ்டிரக்‌ஷன்’ பகுதிக்கு சென்று இதை மேற்கொள்ளலாம். அதில் உள்ள, ‘மாடிபை’ வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பின், உங்கள் கார்டின் 16 இலக்க எண்ணை சமர்ப்பித்து, சி.வி.வி., எண் மற்றும் காலாவதியாகும் நாள் விபரத்தையும் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், ஏற்கனவே கொடுக்கப்பட்ட ‘ஆட்டோ பே’ உத்தரவுகளை தடையில்லாமல் தொடரலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)