பதிவு செய்த நாள்
30 டிச2018
23:52
பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில் சிப் பொருந்திய கார்டுகள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், பில்களை செலுத்துவதற்கான, ‘ஆட்டோ பே’ வசதியை தொடர தேவையான மாற்றத்தை செய்ய வேண்டும்.
ரிசர்வ் வங்கி நெறிமுறைகளின் படி, அனைத்து வங்கிகளும், ‘மேக்னடிக் ஸ்டிரைப்’ அடிப்படையிலான டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்காக, புதிய, இ.எம்.வி., சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்க வேண்டும். இதற்கான கெடு இன்றுடன் முடிவடைவதால், பெரும்பாலான வங்கிகள் இதற்கான செயல்முறையை ஏற்கனவே துவக்கி விட்டன.
புதிய சிப் பொருந்திய கார்டுகள் பாதுகாப்பு மிக்கவையாக கருதப்படுகின்றன. இவை, 16 இலக்க எண் கொண்டவை. ஏற்கனவே டெபிட் மற்றும் கிரெடிட் காரை மாற்றிக்கொள்ளாதவர்கள், இது தொடர்பாக வங்கியை அணுகி, புதிய கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.புதிய டெபிட் கார்டு பெற்று அதை முதல் முறை பயன்படுத்திய பின், பழைய கார்டு தானாக செயல் இழந்துவிடும். இதற்கான விதிகள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
பழைய கார்டு செயலிழக்கும் போது, அதனுடன் பில்களை தானாக செலுத்த வழி செய்யும் ’ஆட்டோ பே’ வசதி கொடுக்கப்பட்டிருந்தால், அதற்கான உத்தரவும் செயலிழந்து விடும்.எனவே புதிய கார்டு தொடர்பாக, ஆட்டோபே வசதியை மறக்காமல் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ‘நெட் பேங்கிங்’ சேவையில் நுழைந்த உடன், ‘ஸ்டாண்டிங் இன்ஸ்டிரக்ஷன்’ பகுதிக்கு சென்று இதை மேற்கொள்ளலாம். அதில் உள்ள, ‘மாடிபை’ வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின், உங்கள் கார்டின் 16 இலக்க எண்ணை சமர்ப்பித்து, சி.வி.வி., எண் மற்றும் காலாவதியாகும் நாள் விபரத்தையும் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், ஏற்கனவே கொடுக்கப்பட்ட ‘ஆட்டோ பே’ உத்தரவுகளை தடையில்லாமல் தொடரலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|