பதிவு செய்த நாள்
02 ஜன2019
00:41
புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 94 ஆயிரத்து, 726 கோடி ரூபாயாக சரிவடைந்தது. இது, நவம்பரில், 97ஆயிரத்து, 637 கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 16 ஆயிரத்து, 442 கோடி ரூபாய்
திரட்டப்பட்டுள்ளது.மாநில அரசின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 22 ஆயிரத்து, 459 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
மாநிலங்கள் இடையிலான விற்பனைக்கு, மத்திய அரசு வசூலிக்கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 47 ஆயிரத்து, 936 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதல் வரி வாயிலாக, 7,888 கோடி
ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஜி.எஸ்.டி., வருவாயில், மத்திய அரசுக்கு, 18 ஆயிரத்து, 409 கோடி ரூபாய்; மாநில அரசுகளுக்கு, 14 ஆயிரத்து, 793 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.ஆக., – செப்., மாதங்களில், மாநிலங்களுக்கு, வரி இழப்பீடாக, 11,922 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஜூலையில் திரட்டப்பட்ட, ஜி.எஸ்.டி.,யில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 15 ஆயிரத்து, 877 கோடி ரூபாய்
திரட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 22 ஆயிரத்து, 293 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
மாநிலங்கள் இடையிலான விற்பனைக்கு, மத்திய அரசு வசூலிக்கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 49 ஆயிரத்து, 951 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதல் வரி வாயிலாக, 8,362 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது.டிசம்பர் 30, நிலவரப்படி, ஜி.எஸ்.டி.ஆர் – 3பி படிவத்தில் விற்பனை கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை,72.44 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|