பதிவு செய்த நாள்
02 ஜன2019
23:21
புதுடில்லி:இரு சக்கர வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் என, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர், பவன் முன்ஜால் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டில், அதிகமானோரால் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வாகனங்கள், ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும், 28 சதவீத வரி விதிப்பின் கீழ் உள்ளன.இதை, உடனடியாக, 18 சதவீதமாக குறைக்க வேண்டும். இதனால், லட்சக்கணக்கான இரு சக்கர வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர். அத்துடன், இத்துறையை சார்ந்துள்ள அனைவருக்கும், வரி குறைப்பால் பலன் கிடைக்கும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான, ‘பாரத் ஸ்டேஜ் – 5’ விதிமுறைக்கு மாறுவதால், இரு சக்கர வாகனங்கள் விலை உயரும். இது, இந்த வாகனங்களை சார்ந்த தொழில் புரிவோருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, இரு சக்கர வாகன துறை வளர்ச்சிக்கும், அதற்கு அடித்தளமாக விளங்கும் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|