வாராக்கடனை மறுசீரமைக்க அனுமதி :  ரிசர்வ் வங்கி,  கவர்னரின் புத்தாண்டு பரிசு வாராக்கடனை மறுசீரமைக்க அனுமதி : ரிசர்வ் வங்கி, கவர்னரின் புத்தாண்டு ... ...  ஜி.எஸ்.டி., விலக்கு உயர வாய்ப்பு ஜி.எஸ்.டி., விலக்கு உயர வாய்ப்பு ...
தயாரிப்பு துறை வளர்ச்சியில் தொய்வு தொடர்ந்து 14 மாதங்களாக ஏற்றுமதி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
23:34

புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைந்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துஉள்ளது.


பிரிட்டனில், தலைமை அலுவலகத்துடன் செயல்பட்டு வரும், ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம், தரவு சேகரிப்பு துறையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400க்கும் அதிகமான நிறுவனங்களின் டிசம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:


கடந்த, 2018, டிசம்பரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 53.2 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, நவம்பரில், 54 புள்ளிகளாக இருந்தது. எனினும், தயாரிப்பு துறை, கடந்த ஆண்டிலேயே, டிசம்பரில் தான், இரண்டாவது முறையாக அதிகபட்ச வளர்ச்சியை கண்டுள்ளது.


அது மட்டுமின்றி, 2012, அக்., – டிச., காலாண்டுக்கு பின், 2018, அக்., – டிசம்பர் காலாண்டில் தான், தயாரிப்பு துறை, அதிகபட்ச சராசரி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், மூலப்பொருட்கள் பணவீக்கம், 34 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. புதிய, ‘ஆர்டர்’கள் அதிகரித்ததால், நிறுவனங்கள், உற்பத்தி மற்றும், பணியாளர் எண்ணிக்கையை உயர்த்தின.சர்வதேச சந்தையில், இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால், ஏற்றுமதி உயர்ந்துள்ளது.


தொடர்ந்து, 14 மாதங்களாக, தயாரிப்பு துறையின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இத்துறையின் வளர்ச்சி, நவம்பரை விட, டிசம்பரில் சற்று குறைந்துள்ளது. இருந்த போதிலும், கடந்த ஆண்டில், விரைவான உற்பத்தி வளர்ச்சியை கண்ட மாதங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அறிகுறிகள்



தயாரிப்பு துறை நிறுவனங்கள், சிறந்த உற்பத்தி திறனில் இயங்கி வருகின்றன. பொருட்களின் வினியோகமும், திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள் செலவினமும் குறைந்துள்ளது.மூன்றாவது காலாண்டு வளர்ச்சியும் நன்கு உள்ளது.இவை, பணவீக்க அழுத்தம் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள். அதனால், அடுத்த மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யுமா என்பதை பார்க்க வேண்டும்.

– பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்..

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)