பதிவு செய்த நாள்
02 ஜன2019
23:36
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில் விலக்கு பெறுவதற்கான விற்றுமுதல் வரம்பு உயரும் எனத் தெரிகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 10ம் தேதி நடைபெறுகிறது.இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு பெறுவதற்கான விற்றுமுதல் வரம்பை, தற்போதைய, 20 லட்சத்தில் இருந்து, 75 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
கட்டப்படும் குடியிருப்புகள், கட்டி முடித்து விற்கும் போது, பணி பூர்த்தி சான்று இல்லாத பிளாட்டுகள் ஆகியவற்றுக்கான, 12 சதவீத, ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சேவை துறையில் உள்ள சிறிய நிறுவனங்களை, ‘காம்போசிஷன்’ திட்டத்தில் சேர்க்க, கடந்த கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான வரி வரம்பு, வரும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|