ஜி.எஸ்.டி., விலக்கு உயர வாய்ப்பு ஜி.எஸ்.டி., விலக்கு உயர வாய்ப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் சரிவு ; ரூபாயின் மதிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2019
10:29

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய நிலையில் சற்று நேரத்தில் ஏற்றம் கண்டன. ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது.

உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றதால் வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.90 புள்ளிகள் சரிந்து 35,787.62-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 117.60 புள்ளிகள் சரிந்து 10,792.50-ஆகவும் வர்த்தகமாகின.

சிறிதுநேரத்தில் சரிவிலிருந்து மீண்டன பங்குச்சந்தைகள். காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 75.35 புள்ளிகள் உயர்ந்து 35,966.87-ஆகவும், நிப்டி 14.2 புள்ளிகள் உயர்ந்து 10,806.70-ஆகவும் வர்த்தகமாகின.

மீண்டும் சரிவு

பங்குச்சந்தைகள் மீண்டும் சரிவு பாதைக்கு சென்றன. நண்பகல் 12மணியளவில் சென்செக்ஸ் 195 புள்ளிகளும், நிப்டி 70 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு சரிவு

பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டபோதும், ரூபாயின் மதிப்பு சரிவுடனே வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.70.40-ஆக வர்த்தகமானது. உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், கச்சா எண்ணெய் விலை சரிவாலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)